எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Sunday, February 25, 2024

திரிசூலம்

 

திரிசூலம்

 

வெகு சில ஆண்டுகளாக

எலும்பிச்சம்பழம் குத்தப்படாமல்

பூசாரி கிழவியும் சூலாயுதமும்

பொலிவின்றி நிற்கின்றன

 

குங்குமச் சாறு பிதுங்க

எலும்பிச்சம் பழம் ஒன்றை

சூலத்தில் சூடினேன்

 

கொலை செய்த பாதகர்களே

ஓய்.. ஏய்.. என்று

பூசாரி கிழவி கொற்றவை ஆடினாள்

 

கண்ணீர் பூ உதிர்த்தபடி

வெறி பிடித்து அலறினாள்

 

மீன்குஞ்சு போல் திரிந்த

சிறுசுகளை கொளுத்துனீக

 

தெருத்தெருவா வீடுடைத்து

இளசு பெருசு துடிதுடிக்க

வாள் வீசி வெட்டுனீக

ஜெய்ஸ்ரீராம் தாகம் தீர

ரத்தப் பிண்டம் கொடுத்தீக

 

வேட்டிக்குள் விரைத்திருந்த

ராமனின் வில் பாய்ச்ச

காக்கை உடை கிழித்து

உடைந்த பெண்களை எரித்தீக

 

வில்லெடுத்த ராமன்களே

நிறைமாத கர்பிணிக்கும்

புடைத்த வயிறு கிழித்தீக

சிசுவென்று பாராது

தின்றொழித்த ஓநாய் போல்

சூலாயுத வாயால்

உயிர் செருகி எரித்தீக

 

காவி வெறி பேடிகளே

சனாதனத்தின் மலக்கழிவே

அணங்கு சூழ் கொற்றவை

காளி ஆடி வருகிறாள்

நீலம் கருப்பு சிவப்பு

திரிசூலம் ஏந்தி வருகிறாள்

 

காவிக்குடுமி பொசுங்க

விரைத்த குறி

அறுந்த வாலாய் துடிதுடித்து புரள

எலும்பிச்சம் பழம் போல்

சனாதன மூளை அழுகி பிசுபிசுக்க

சூலாயுத கூர் நாவில்

காவிக் கதை முடிப்பாள்

No comments:

அதிகம் படித்தவை