எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, February 28, 2024

அணிலாடும் நெடுமரங்கள்

அணிலாடும் நெடுமரங்கள்

 

சுள்ளென்று எரித்தது வெயில்

மூன்று நெடு மரங்கள்

கோடிணைத்தால் முக்கோணம் வடிவுறும்

அகண்ட பாரதமாய் நிழலிட்டன

இலைகளுக்கு இடையில் நிலமெங்கும் வெண்புள்ளி

 

புலி கொன்ற மடமானின் எஞ்சிய எலும்பு

இந்திரனின் வஜ்ரம்போல் காட்சி தந்தது

 

ஒழுக்கமுள்ள எறும்புகள்

இந்திரனை மிதித்தபடி உணவு சேகரித்தன

 

 

ஒளிந்தொளிந்து தப்பித்து

ஓடோடும் பெண் அணிலை

மரத்திற்கு மரம் மாறி

அணிலாடும் ஆணினங்கள்

வன்புணர்ந்து விளையாடின

 

வில்லாடும் ராமன்

அணில் முதுகை வருடியபடி

நிழலாடி மகிழ்ந்திருந்தான்

 

சில்லிட்டு காற்றடிக்க

அணில்களால் கிளரப்பட்ட ராமன்

சிற்றின்ப தீனிக்கு புராணமெல்லாம் நினைவசைத்தான்

 

பார்வதியை மோகித்து மகள் புணர்ந்த பிரம்மன்

நிர்வாணத்தை எட்டிப்பார்த்து தலை இழந்த பிரம்மன்

 

அகலிகையை ஏய்த்த இந்திரன்

துளசியை ஏய்த்த ஸ்ரீவிஷ்ணு

நாரதனின் வில் ஏங்க

அறுபது பெண் புணர்ந்து வருடம் தந்தான்

மோகித்த நாரதனையும் புணர்ந்திசைத்தான்

 

சிறுத்தை அடித்த மான்

ஓநாய் திருடிக் கவர்தல் போல

சிசுபால ருக்மணியை

கிருஷ்ணன் திருடிப் புணர்ந்தான்

பிறர் மனை எழுவரை புணர்ந்த தாகம் தீராதும்

கோபியப் பெண் பத்தாயிரம்

புசிபுசித்தப் பின்பும்

ராதையும் புணர்ந்தான் கள்ளக் கிருஷ்ணன்

 

நினைவாடும் புராணங்கள்

ராமன் தலை கிறுகிறுக்க

அணிலாடு மன்றத்தில்

காம வெறி உச்சமிட

மன்றம் தொடங்கினான் ராமன்

பாலியல் ஜல்சாவில்

பலபல தொண்டர்கள்

பாரத மகள்களை வில்லெய்து எரித்தனர்

 

வன்புணர்ந்து பிசுபிசுத்த கோயில் கருவறை

கொலைபட்ட சிறுமியின் நசுங்கிய எலும்புகள்

புண்பட்டு பிளந்த யோனிபோல்

ரத்தம் பிசுப்பேறி கிடந்தன பாறைகள்

அனுமன் ஓய்வாக சாய்ந்திருந்தான்

குருதியில் வால் நனைத்து மகிழ்ந்திருந்தான்

 

ஊர்கூடி வன்புணர

நிர்வாண மகளை ஊர்வலம் செய்தனர்

மண்ணும் வானும் வெட்கி குனிந்தன

 

காற்றெங்கும் காவிகளின் ராம கோசம்

நாடெங்கும் பெண்கள்பிண நாற்றம் வீசும்

 

வில்விட்ட அம்பு உயிர் தொடுதல்போல்

உயிர்விட்ட பெண்குரல் செவி பாய்ந்தன

 

அணங்கு சூல் இசக்கி

கொல்லிப்பாவை மாரி

காளி வனப்பேச்சி

தவ்வை கொற்றவை

ஒருமித்த தமிழுடல்

சினமேறி சிலிர்த்தன

கரு நீல சிவப்பொளியில் போருடலாய் மிளிர்ந்தன

 

பாலியல் ஜல்சா வில்லர்கள்

பிண மாலை ஆனார்கள்

சனாதனப் பன்றி வெட்டி

வில்லர்கள் நெருப்பேறி

கிளரப்பட்ட பேய் கஞ்சி

காளியின் போர் கஞ்சி

சமூக நீதிக்கு நோய் மருந்து

ஜனநாயக உயிர்க்கு பெரும் விருந்து

 

கருத்த நெற்றியில் பவுர்ணமிப் பொட்டு

திரிசூலக் கூத்தாடும் முத்தமிழ் அணங்கு

புரட்சியின் மூவண்ணப் புகையாக சூழ்ந்தாள்

சனாதன ராமனை அருவமாய்ச் சூழ்ந்தாள்

தொடைநடுங்கி ராமன்

அச்சத்தின் உச்சம் தொட்டான்

சரயு நதி எங்கே?

திசையெங்கும் தேடினான்

தற்கொலைக்கு ஏங்கினான்

 

சோலி முடித்தாள் தமிழணங்கு

வில்லாடும் ராமனின் சங்கறுத்தாள் வில்லறுத்தாள்

அறுபட்ட வில் துடிதுடித்து புரள

சனாதனப் பேயன்

கடல் அழித்த சுவடானான்

No comments:

அதிகம் படித்தவை