எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, February 18, 2019

இந்தியாவில் சாதிகளின் சதி

இந்தியாவில் சாதிகளின் சதி 
(சமூகவிஞ்ஞான ஆய்வு)
புதியவன்


உலகில் வேறெங்கும் இல்லாத சாதியப்படிநிலை இந்தியாவில் மட்டும் எப்படி தோன்றியது. இதற்கான விடைகளைத் தேடி ஏராளமான ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. பிறப்பால் உயர்வு தாழ்வு போதிக்கின்ற கற்பிதத்தை கற்பனையில் ஏற்றுக்கொண்டால் ஒழிய ஐம்புலன்களால் உணர முடியாத சாதியப் பண்பாட்டை இந்திய மூளைகள் எப்படி சுமந்தன? சங்க இலக்கியங்களில் சாதிப்படிநிலைகள் இல்லை. தொல்காப்பியத்தின் மரபியல் உணர்த்தும் படிநிலைகள் இடைசெருகலோ என்ற ஐயம் தொடர்கிறது. அம்பேத்கர் விளக்கப்படி ஆரியத் தொல்குடிகளிடமிருந்து சாதிப்படிநிலை பண்பாடாகக் கிளர்ந்தது என உணர முடிகின்றது. ஆனால் ஆரியர்கள் தொல்குடிகள் என்ற கூற்று மட்டும் முரணாக அமைகின்றது.
சிந்து வெளி நாகரிகம் முதல் பொருந்தல், கொடுமணல், கீழடி அகழாய்வு மற்றும் மரபணு ஆய்வுவரை அனைத்தும் இந்திய வாழ்வியலில் இடையில் நுழைந்தவர்களே ஆரியர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றன. ஆரியர்களின் சமஸ்கிருதம் இந்திய தாய்மொழிகளில் இடம்பெறாத அந்நிய மொழியென்பதும் மற்றொரு ஆதாரமாகும். எனினும் சாதியப்படிநிலையின் தோற்றம் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட பண்பாடு என்பதில் முரணில்லை. எனினும் இக்கட்டுரை விளக்க முயல்கின்ற பொருண்மை எதுவெனில் அந்நியராக நுழைந்த ஆரியர்களின் கற்பிதத்தை இந்திய மூளைகள் எதற்காக தங்களின் பண்பாடாக ஏற்றுக்கொண்டன? ஒரு அந்நியரின் கற்பிதம் எப்படி இந்தியர்களின் தனித்துவப் பண்பாடாக உருமாறியது? இவற்றிற்கான விடயங்களே இக்கட்டுரை. ஆரியர்கள் இந்திய மக்களை திராவிடர்கள் என்ற சொல்லில் குறிப்பிட்டதைப்போல இந்தக் கட்டுரையிலும் திராவிடர் என்ற சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.
சமூகவிஞ்ஞான விளக்கப்படி சமூகத்தில் எந்த ஒன்றைப் பற்றிய ஆய்விற்கும் உற்பத்திமுறை பற்றிய ஆய்வு அடிப்படையாகும். சாதியப் பண்பாடு பற்றிய ஆய்விற்கும் இந்த வழிமுறை அவசியமாகின்றது. மனிதகுல வரலாற்றில் சமூகப் பொருளுற்பத்தியின் வளர்ச்சி படிநிலைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1.      காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.      வேட்டை நாகரிகம்
3.      கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.      விவசாய நாகரிகம்
5.      உற்பத்தி மீதான வணிக நாகரிகம்
6.      வணிக இலாபத்திற்காகவே உற்பத்தி செய்தல்
7.     நிதிமூலதனப்பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல்
8.      மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல்
இவற்றில் சாதியப் பண்பாடு எத்தகைய சமூகப் பொருளுற்பத்தியின் தேவையிலிருந்து தொடங்கியது என்பதை அறிய வேண்டும். எனது கணிப்புப்படி திராவிட நாகரிகத்தில் 4, 5  ஆகிய விவசாயம் மற்றும் வணிக உற்பத்தி நிலையின் இடைக்கட்டத்தில் தொடங்கியிருக்க வேண்டும். இக்காலக் கட்டத்தில் ஆரிய நாகரிகம் மனிதகுல வரலாற்றின் மூன்றாம் கட்டமாகிய கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகமாகவே இருக்கின்றது.
இந்திய மக்களின் தொன்மையான நாகரிகங்களைத் தேடியவரை நமக்கு கிழ்கண்ட முடிவுகள் கிடைக்கின்றன.
திராவிடர்களில் கால்நடை மேய்த்து வாழ்கின்ற மக்கள் இருந்தார்கள். விவசாயம் செய்து விளைவித்து வாழ்கின்ற மக்கள் இருந்தார்கள். காடு சார்ந்த பொருள் சேகரிப்பிலும் வேட்டைத் தொழிலிலும் ஈடுபடும் மக்கள் இருந்தார்கள். உப்பு உற்பத்தியிலும் மீன்பிடிப்பதிலிலும் ஈடுபடும் மக்கள் இருந்தார்கள்.  அதிகமான நில அடிமைகளைக் கொண்டு நிலப்பிரபுக்களின் விவசாய உற்பத்தி நிகழ்ந்துகொண்டு இருந்தது. நிலப்பிரபுக்களின் தலைமையில் அரசு இருந்தது. நிலங்களையும் நில அடிமைகளையும் விரிவுபடுத்துவதற்கான அரசப் போர்கள் சிறிய அளவில் தொடங்கியிருந்தன. ஆளும் அரசனும் அரச படைகளும் சட்டங்களும்  நிலப்பிரபுக்களின் நன்மைகளுக்கேற்ப ஆட்சி செய்தன. பொருள்களை சமூக அளவில் பரிமாறிக்கொள்ளும் சேவைத் தொழிலாக வணிகம் தோன்றி வளர்ந்தது. விவசாயத்தை சார்ந்தும்அரசுப் படைகளின் தேவைகளைச் சார்ந்தும்வணிக வளர்ச்சியின் தேவைகளைச் சார்ந்தும் பலவிதமான மக்கள் கைத்தொழில் கலைகளில் ஈடுபட்டுக்கொண்டு  இருந்தார்கள். பொருள்களின் பரிமாற்றத்திற்காக வியாபாரிகளின் தலைமையில் சந்தைகள் அமைக்கப்பட்டு இருந்தன. பொருள்கள் முதல் அடிமைகள்வரை அனைத்தும் சந்தையில் வியாபாரம் செய்யப்பட்டன.
வியாபாரத்தில் ஈடுபட்ட வணிகப் பிரிவினர் எல்லை கடந்து வெவ்வேறு அரசுகளின் பகுதிகளுக்குச் சென்று விற்றல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இதனால் நிலப்பிரபுக்களுக்கு நிகராக வணிகர்கள் வளரத் தொடங்கினார்கள். சொத்துக்களும் வெளியுலகத் தொடர்புகளும் அரசுகளின் செல்வாக்கும் வணிகர்களுக்கு பெருகிக்கொண்டு இருந்தன. தங்களுக்கு நிகராக வணிகர்கள் வளர்வதை நிலப்பிரபுக்கள் எதிர்த்தார்கள். தங்கள் அரசின் மூலமாக அதிக வரி சுமத்தி வணிகர்களை ஒடுக்க முயன்றார்கள். நிலப்பிரபுக்களுக்கு எதிராக அரசின் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வணிகர்கள் முயன்றுகொண்டே இருந்தார்கள். நிலப்பிரபுக்களுக்கும் வணிகர்களுக்கும் இடையில் அரசன் திணறிக்கொண்டு இருந்தான்.
அரசனின் திணறலுக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று வளர்ந்து வருகின்ற வணிகர்களின் செல்வாக்கை நிலப்பிரபுக்களின் சார்பாக எதிர்க்க முடியவில்லை. அவர்கள் ஈட்டித்தருகின்ற பலவிதமான பொருட்களை அரசன் விரும்பி வரவேற்கிறான். மேலும்  வணிகர்களுக்கு எல்லை கடந்த அரச தொடர்புகள் இருப்பதால் பகைப்பதும் நல்லதல்ல. எனவே நிலப்பிரபுக்களின் விருப்பத்திற்கு மாறாக வணிகர்களின் வளர்ச்சியை ஆதரிக்க வேண்டிய நிலையிலுள்ளான். இரண்டு அரசனைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளவர்கள் நிலப்பிரபுக்கள். அரசன் என்பவன் நிலப்பிரபுக்களில் ஒருவன். வணிகர்கள் தங்களுக்கு நிகராக செல்வாக்கு அடைவதை நிலப்பிரபுக்கள் எதிர்க்கிறார்கள். எனவே   அதீதமான வரிகளைச் சுமத்தி  வணிகர்களின் வளர்ச்சியை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திலுள்ளான். எனவே இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையில் போட்டி வளர்கிறது. அரசன் யாரை ஆதரித்தாலும் எதிர்ப்பு நிச்சயம். நிலப்பிரபுக்களுக்கும் வணிகர்களுக்கும் இடையிலான இத்தகைய இழுபறியில்தான் அரசு திணறிக்கொண்டு இருந்தது. அரசின் திணறல் உருப்பெற்றுக்கொண்டிருந்த காலத்தில்தான் ஆரியர்களின் நுழைவு தொடங்குகிறது.
 சமஸ்கிருத மொழியை உச்சரிப்பவர்கள் சற்று தூரத்தில் வந்துகொண்டிருந்தார்கள்.  கைபர்  போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் வந்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் கால்நடை மேய்ச்சல் நாகரிகத்தைத்தான் அடைந்திருந்தார்கள். தாய்தலைமை சமூகத்திலிருந்து மாறி சொத்தாதிக்க தந்தை அதிகார சமூகமாகப் பண்பட்டிருந்தார்கள். நெருப்பை புனிதமாக வழிபடுவதும்இறைச்சிகளை நெருப்பில் இட்டு உண்பதும் தலைசிறந்த வழக்கமாக கொண்டிருந்தார்கள். தந்தை அதிகார சமூகத்தின் அடையாளங்களாக ஆண் கடவுளர்களை உருவாக்கிக்கொண்டு வழிபட்டு வந்தார்கள். ஸ்ரீ என்ற ஒரேயொரு பெண் தெய்வத்தைத் தவிற அனைத்தும் ஆண் தெய்வங்களே. தங்கம்இரும்பு போன்ற உலோகத்தினாலான பொருட்களைப் பெற்றிருந்தார்கள்.
ஆயுதங்களையும் கருவிகளையும் உடலோடு பிணைத்துக்கொள்வதற்காக கட்டுக் கருவிகளை பயன்படுத்தினார்கள். இக்கருவி தோல்களாலும்மரநார்களாலும் அமைந்திருந்தன. உணவு சேகரிப்பு கருவிகளையும்வேட்டைக் கருவிகளையும்மேய்ச்சல் கருவிகளையும் கால்நடைகள் மீது ஏற்றிக்கொண்டு வந்தார்கள். அவர்களது கால்நடை மேய்ச்சல் நாகரிகத்திலிருந்து பொருள்உலகம்ஞானம் பற்றிய புதிய தேடல்களுடன் வந்தார்கள்.முன்னேறும் பாதையெல்லாம் வழிகளாக்கிக்கொண்டு வந்தார்கள். ஆனால் பண்டைய இந்தியாவில் வழிகளை உருவாக்குவது அவர்களுக்கு சவாலாக இருந்தது.
வழக்கமாக அவர்கள் முன்னேறுகின்ற பாதைகளில் காடுகளை அழிப்பார்கள். அச்சமூட்டும் உயிரினங்களை போராடி கொல்வார்கள். அவர்களது கடவுளின் பெயரைச் சொல்லி நெருப்பை வளர்ப்பார்கள். அழித்துப் பெற்றவைகளை நெருப்பில் இட்டு மந்திரம் சொல்வார்கள். மந்திரம் என்பது நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற வாசகங்கள் ஆகும். தங்களது தேவைகளை நெருப்பின் மூலமாக கடவுளரிடம் முறையிட்டார்கள். அதேபோல் கிடைப்பவைகளை நெருப்பில் இட்டு தங்கள் கடவுளர்களுக்கு அர்ப்பனிக்கவும் செய்தார்கள்.
இன்று கிடைப்பதுபோல் மாமிசங்களும் பழம் கொட்டை கிழங்குகளும் நிறைவாகக் கிடைக்க வேண்டும் என்று மந்திரம் சொன்னார்கள். கால்நடைகள் மேய்வதாகவும் பெருகுவதாகவும் வேண்டும் என்று மந்திரம் சொன்னார்கள். இயற்கை வளம் சிறக்க மழை வேண்டும் என்று மந்திரம் சொன்னார்கள். எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்று மந்திரம் சொன்னார்கள். இத்தகைய தேவைகளின் அடிப்படையில் பல்வேறு வர்ணனைகளுடனும் கற்பனைகளுடனும் மந்திரங்களைச் சொன்னார்கள்.
அவர்களால் வீழ்த்தப்பட்ட எதிரிகள் என்பவை வேட்டை மிருகங்கள் மட்டுமல்ல. கால்நடை மேய்ச்சல் நாகரிகத்தை எட்டாத மக்களும் அடங்கியிருந்தார்கள். அதாவது காடு சார்ந்த பொருள் சேகரிப்பிலும் வேட்டையிலும் மட்டுமே ஈடுபட்டு வாழ்ந்த பழங்குடி மக்களும் அடங்கியிருந்தார்கள். தாய் தலைமை சமூகத்திலேயே வாழ்ந்தவர்களும் தந்தை அதிகார சமூகத்தின் ஆரம்பத்தை எட்டியிருந்தவர்களும் அடங்கியிருந்தார்கள். ஆரியர்களால் தங்கள் காடுகளும் உயிரினங்களும் ஆக்கிரமித்து அழிக்கப்பட்டபோது எதிர்த்துப் போராடிய நம் மூதாதையர்களும் அடங்கியிருந்தார்கள். ஆரிய புராணங்கள் உணர்த்தும் நரகாசூரன், மகாபலி போன்றவர்கள் இத்தகைய பழங்குடிகளின் தலைவர்கள்.
ராட்சசர்கள் அசுரர்கள் போன்ற பெயர்களில் இந்த முன்னோர்கள் ஆரியர்களால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பண்டைய இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்த புதிய அசுரர்களாகிய திராவிட அரசர்களை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. தங்களைவிட மேம்பட்ட விவசாய வணிக நாகரிகத்தை அடைந்திருந்த திராவிடர்களை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. நில அடிமைகளையும் அரசு படைகளையும் நேர்த்தியாக வைத்திருந்த திராவிடர்களை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. திராவிடரை அறிந்துகொள்ளாமல் மோதிய ஆரியர்கள் வீழ்த்தப்பட்டார்கள். தப்பியவர்கள் செல்வங்களை இழந்து ஓடினார்கள். இந்த திராவிடர்களை அவர்களால் கடந்துபோகவும் முடியவில்லைவிட்டு ஓடவும் முடியவில்லை.
புத்தியற்ற ஆரியர்கள் புத்தியைத் தீட்டிக்கொள்ள கடமைப்பட்டார்கள். மோதல்களைத் தவிர்த்துக்கொண்டு தனியாக ஒதுங்கி வாழ்ந்தார்கள். திராவிட சந்தைகளில் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு திராவிடப் பண்பாட்டைக் கற்றார்கள். ஆரியர்களின் பொருள்உலகம்ஞானம் பற்றிய தேடல்களுக்கு சவாலாக இருந்த திராவிட சமூகத்தைக் கற்றார்கள். அவர்கள் கற்றுணர்ந்தவரை நிலத்தை ஆள்பவனே அரசனாக இருந்தான். நிலப்பிரபுக்களது அதிகாரத்தில் அரசு இருந்தது. அதிகாரத்தில் பங்கேற்க வணிகர்கள் முயற்சி செய்துகொண்டு இருந்தார்கள். இருவருக்கும் இடையில் அரசு திணறிக்கொண்டு இருந்தது. இந்த அரச திணறல் என்ற பிரச்சனைகளுக்கு இடையில்தான் இந்திய சமூக மக்களின் வாழ்க்கை மூழ்கிக் கிடந்தது. இழுபறிக்கு இடையில் திணறிக்கொண்டிருக்கும் அரசர்களுக்கு ஆட்சியை எப்படி நிலைபடுத்துவது என்பதே பிரச்சனையாக இருந்தது. இந்தப் பிரச்சனைகளின் வழியாக திராவிட சமூகத்தில் நீந்துவதற்கு ஆரியர்கள் துணிந்துவிட்டார்கள். இழுபறியில் இருந்த அரச அதிகாரத்தை தமக்கு பணியவைக்க ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
புரியாத சமஸ்கிருத மந்திரங்களால் நெருப்பை வணங்கும் ஆரியர்களின் பண்பாட்டை திராவிடர்களும் விநோதமாகவே கவனித்து வந்தார்கள். ஆரியர்களைப் பற்றிய மந்திரவாதிக் கதைகளை நாளெல்லாம் பேசிக்கொண்டு வந்தார்கள். பல தலைமுறைகளாக திராவிட ஆரிய சமரசம் நிகழ்ந்துகொண்டு இருந்தது. ஆரியர்களின் வெற்றிக்காலம் நெருங்கத் தொடங்கியது. அவர்கள் திராவிட சமூகப் பாதையில் தங்களுக்கான  வழியை ஏற்படுத்தும் வித்தையைக் கண்டறிந்தார்கள். அதுதான் வர்ணாசிரமப் படிநிலை என்கின்ற நான்கு வர்ணக் கோட்பாடு.
அவர்கள் கணக்குப்படி இந்திய மக்களை நான்காகப் பிரித்தார்கள். வேடிக்கை என்னவென்றால் அந்த நான்கில் அவர்களும் இருக்கிறார்கள். பல தலைமுறைகளாக திராவிடப் பண்பாட்டைக் கற்ற சிந்தனை உழைப்பினால் இந்த உரிமையை எடுத்துக்கொண்டார்கள். 1.அரசன்2.வணிகன்3.நிலஅடிமைகள் உள்ளடங்கிய பிற மக்கள். இந்த மூன்று பிரிவிற்கும் தலைமையாக ஆரியர்கள் இருப்பதாகக் கோட்பாட்டை உருவாக்கினார்கள். தலைமை என்றால் அரசனின் ஆட்சிக்கு தலைமை என்ற பொருளில் உணர முடியாதவாறு விளக்கினார்கள். உழைக்காமல் செல்வங்களை அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையில் தெளிவாக இருந்தார்கள். ஏனெனில்அவர்கள் அடைய வேண்டிய பொருளாதார முன்னேற்றங்களை திராவிட சமூகம் கண்டு கரை தேர்ந்திருக்கிறது. இவற்றை நோகாமல் அனுபவிப்பதற்கான முயற்சி மட்டுமே அவர்களுக்கு சவாலாக இருந்தது. திராவிடன் கத்தியைத் தீட்டியபோது ஆரியன் புத்தியைத் தீட்டினான்! என்ற பழமொழி இத்தகைய சவாலை இன்றும் நினைவுகொள்கின்றது. அவர்கள் பல்வேறு கூட்டு முயற்சியால் இந்தக் கோட்பாட்டை மெருகேற்றினார்கள். அரசர்கள் ஏற்கும்படி இந்தக் கோட்பாட்டை உறுதிபடுத்தினார்கள்.
அவர்கள் நான்கு வர்ணக் கோட்பாட்டை கடவுளின் பெயரால் விளக்கத் தொடங்கினார்கள். அவர்களின் விளக்கப்படி ஆரியர்கள் தங்களை பிரம்மமாகிய கடவுளுக்கு உரியவர்கள் என்பதாக விளக்குகிறார்கள். பிரம்மம் என்றால் கடவுள். கடவுள் உலகைப் படைத்துக் காக்கின்றார். உலகப் பொருட்கள் அனைத்தும் கடவுள் தீர்மானித்தபடி இயங்குகின்றன. உலகை இயக்குகின்ற  கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்படுகிறார். மந்திரங்கள் சமஸ்கிருத வேதங்களுக்கு கட்டுப்படுகின்றன. சமஸ்கிருத வேதங்கள் சமஸ்கிருத மொழி பேசும் எங்களுக்குக் கட்டுப்படுபவை. எனவே நாங்கள் கடவுளின் மொழியால் கடவுளர்களுடன் உறவு கொண்டிருப்பவர்கள். கடவுளர்களை பிரம்மம் என்பதால் பிரம்மத்திற்கு உரிய தங்களை பிராமணர்கள் என்று விளக்குகிறார்கள். வேள்வி செய்வதும்குலச் சடங்குகள் செய்வதும்ஆகம விதிப்படி கோயில் அமைப்பதும்தவம் செய்வதும்தானம் பெறுவதும்தர்மங்களைக் கற்றுக்கொடுப்பதும் பிராமணர்களின் கடமைகளாக கடவுளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று விளக்குகிறார்கள். பிராமணர்கள் தங்களது நான்கு வர்ண படிநிலையில் உச்சத்திலுள்ள முதல் படியில் பாதுகாப்பாக அமர்ந்துகொள்கிறார்கள்.
பிராமணர்களுக்கு அடுத்த இரண்டாம் படியில் அரசர்களை அமர்த்துகிறார்கள்.  அதிகாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் அரச படைகள் பிராமணர்களுக்கு தேவைப்படுகின்றன. அரசன் என்பவன் நிலப்பிரபுக்களின் அதிகாரத்திற்கு உட்பட்டவன். எனவே பிராமணர்களுக்கு நில வருவாய்கள் கைகூடும் நிலை இருக்கின்றன. பிரம்மத்தின் கட்டளைப்படி வர்ணாசிரமக் கடமைகளை சமூகத்தில் பாதுகாப்பதும் நிலங்களை ஆள்வதுமே அரசரின் கடமைகள் என்று விளக்குகிறார்கள். மனுதர்மம், மகாபாரதம், பகவத்கீதை, ராமாயணம் ஆகியன இக்கடமைகளை உணர்த்த எழுந்த இலக்கியங்களே. அரசர்களை சத்திரியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
அரசனுக்கு அடுத்த மூன்றாம் கட்டத்தில் வணிகர்களை அமர்த்துகிறார்கள். பலவிதமான பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கு வணிகர்கள் பிராமணர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். அவர்கள் எல்லைக் கடந்து பயணித்து பொருள்களைக் குவித்துக்கொண்டு வருபவர்களாக இருக்கிறார்கள். எனினும் நிலப்பிரபுக்களின் அளவிற்கு அரச செல்வாக்கு எட்டாதவர்களாக இருக்கிறார்கள். எனவே பிராமணர்கள் தம்மிலிருந்து மூன்றாம் படியில் வணிகர்களை வசதியாக அமர்த்திக்கொள்கிறார்கள். நிலப்பிரபுத்துவ அரசுடன் முரண்பட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான எண்ணங்கள் எழக்கூடாதவாறு பிரம்மத்தின் பெயரால் கட்டளையிடுகிறார்கள்.  வணிகத்தில் ஈடுபடுதலே வணிகர்களின் கடமையாக இருக்கின்றது. இவர்களை வைசியர்கள் என்பதாக குறிப்பிடுகிறார்கள்.
பிராமணர்கள் தங்களது அதிகாரத்திற்கும் சொத்தாதிக்கத்திற்கும் தேவைப்படாதமுக்கியமில்லாத நில அடிமைகள் கைவினைஞர்கள் மற்றுமுள்ள பெரும் திரளான மக்களை நான்காம் படியிலேயே நிறுத்திக்கொள்கிறார்கள். இவர்களை சூத்திரர்கள் என்கிறார்கள். சூத்திரர்கள் எந்தப் பலன்களையும் எதிர்பார்க்காமல் தங்களது குலத்தொழிலில் ஈடுபட வேண்டும். இதுவே பிரம்மத்தின் கட்டளை என்று விளக்குகிறார்கள்.
எல்லா வர்ணங்களிலும் ஆண்களுக்கு பெண்கள் அடிமைகளாக இருக்கக் கடமைப்பட்டவர்கள் என்று பெண்களை இழிவான நிலையில் வைக்கிறார்கள். பெண்கள் உயர்வர்ண ஆண்களுக்கு மனைவியாகவோ வைப்பாட்டியாகவோ விலை மாதுவாகவோ வாழலாம். ஆனால் தன் வர்ணத்திலிருந்து கீழுள்ள ஆண்களுடன் பாலுறவு உரிமையில் ஈடுபடுதல் கூடாது. ஏனெனில் பெண்கள் தங்களது வர்ண ஆணுக்கும் மேல்வர்ண ஆணுக்கும் அடிமையாக வாழக் கடமைப்பட்டவர்கள். ஆணுக்கு சொத்தாக மாறும் பெண்கள் அந்த ஆணிற்கு நேர்மையானவர்களாக வாழ்ந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் வர்ணம் காக்கப்படும். எனவே சொத்துரிமை நிலையிலும் பாலுரிமை நிலையிலும் பெண்கள் அடிமைகளாக வாழக் கடமைப்பட்டவர்கள் என்பதாக உணர்த்தப்படுகிறார்கள். நான்கு வர்ணக் கோட்பாட்டு நிலையில் பெண்ணடிமைப் பண்பு இன்றியமையாததாகவே விளக்கப்படுகின்றது. ஒவ்வொரு வர்ணத்தாரும் தனக்கு மேலுள்ள வர்ணத்தாரை பணிபவர்களாகவும் கீழுள்ள வர்ணத்தாரை கட்டுப்படுத்துபவர்களாகவும் செயல்படுவது கடமையாக இருக்கின்றது.
பிரம்மமாகிய கடவுளால் உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்த நான்கு வர்ணப் படிநிலைகளும் அவற்றின் கடமைகளும் படைக்கப்பட்டுவிட்டன என்பதாக விளக்குகிறார்கள். மனிதர்கள் பிரம்மத்தின் கட்டளைப்படி பிறப்பால் தீர்மானிக்கப்பட்ட கட்டளைகளைச் செய்வதையே தர்மமாகக் கருதி பிழைக்க வேண்டும். அத்தகைய பிழைப்பினால் மட்டுமே மரணமற்ற பெருவாழ்வை அல்லது பிறவியற்ற பெருவாழ்வை அடைய முடியும் என்று விளக்குகிறார்கள். வர்ணக் கடமைகளைக் கடைபிடிக்கத் தவறினால் உலக வாழ்வில் துன்பங்களே நிலைக்கும் என்பதை வழியுறுத்துகிறார்கள். இத்தகைய சாரங்களை உள்ளடக்கியதாக வர்ணாசிரமக் கோட்பாடாகிய நான்கு வர்ணக் கோட்பாட்டை ஆரியர்கள் படைத்திருக்கிறார்கள்.  இந்த நான்கு வர்ணமே பின்னாளில் படிநிலையற்ற ஐந்நாம் நிலையை உருவாக்குகின்றது. இந்த நிலையிலுள்ள மக்களைத்தான் பஞ்சமர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் நான்கு வர்ண மக்களால் ஒதுக்கப்பட்டு மிகவும் இழிவான வாழ்வில் உழல்பவர்கள். குறிப்பாக வர்ணம் கடந்த பாலுறவின் விளைவாகப் பிறந்தவர்கள் என்று விளக்கப்படுகிறார்கள்.

இந்தக் கோட்பாட்டை ஒவ்வொரு அரசனிடமும் சென்று கடவுளின் பெயரால் விளக்கினார்கள். அதாவது பிரம்மமாகிய கடவுள் தனது உடலிலிருந்து மனிதர்களைப் பிறப்பித்ததாக ஒரு கதையைக் கட்டினார்கள். பிரம்மத்தின் தலையில் பிறந்தவர்கள் பிராமனர்கள். தோள்களில் பிறந்தவர்கள் அரசர்களாகிய சத்திரியர்கள். தொடைகளில் பிறந்தவர்கள் வணிகர்களாகிய வைசியர்கள். கால்களில் பிறந்தவர்கள் உழைக்கும் மக்களாகிய சூத்திரர்கள். பிரம்மத்தின் வேசிகளுக்கு பிறந்தவர்கள் பஞ்சமர்கள். இந்தக் கதையைக் கேட்டு பல அரசர்கள் தாங்காது சிரித்தார்கள்.   சில அரசர்கள் ஆரியர்களை விரட்டியடித்தார்கள். அடிவாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காகவே சில தருணங்களில் தந்திரமாக நடித்தார்கள். அரசர்களே தலைமையானவர்கள் பிராமணர்கள் அரசர்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதுபோல பாசாங்கு செய்தார்கள். ஆரிய சூழ்ச்சி வெற்றியடைந்த பின்னாட்களில் தங்களை அவமதித்த இத்தகைய அரசர்களை பழிவாங்க முயற்சித்து புராணக்கதைகளில் இழிவாக சித்தரித்தார்கள். திரிசங்கு, அரிச்சந்திரன் போன்றோர் இவர்களால் சித்தரிக்கப்பட்ட அரசர்களே. ஆனால் கிருஷ்ணன், ராமனைப் போன்ற பெரும்பாலான அரசர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்கள். திணறிக்கொண்டிருந்த அரசர்களுக்கு பிராமணர்கள் விளக்கிய பிரம்மத்தின் கட்டளைகள் மிக வசதியாக இருந்தன. படிநிலைக் கோட்பாட்டின் அடிப்படையில் அரசர்கள் பிறப்பால் அரசாள்வதையே கடமையாகப் பெற்றிருக்கிறார்கள். மக்கள் பிறப்பால் அடிமைகளாக வாழ்வதையே கடமையாகப் பெற்றிருக்கிறார்கள். வணிகர்களுக்கு வணிகமே கடமை என்ற படிநிலைக் கோட்பாட்டின் அதிகாரச் சூழ்ச்சிகளை உணர்ந்து அரசர்கள் செயல்படுத்தினார்கள்.

கடவுளின் பெயரால் பிராமணர்களை அரசர்கள் பணிந்து ஏற்றுக்கொள்வதால் இரண்டுவிதமான நன்மைகள் தென்பட்டன. ஒன்று, பிராமணர்களுக்கு அரசன் பணிவதைப்போல அரசனுக்கு மக்களும்மேல்வர்ணத்தாருக்கு கீழ்வர்ணத்தாரும் பணிவது இயல்பாகிவிடுகின்றது. இரண்டு, நிலப்பிரபுக்களின் சத்திரிய வர்ணம் வணிகர்களை அதிகாரத்திற்கு எழாதவாறு கட்டுப்படுத்துவதைப்போல கீழ்வர்ணத்தார் எழுச்சி பெறாதவாறு மேல்வர்ணத்தார் கட்டுப்படுத்துவதும் இயல்பாகிவிடுகின்றது. இத்தகைய இயல்புகள் அரசாட்சியை கொந்தளிப்பான சூழல்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கின்றன என்பதையும் உணர்ந்தார்கள். திணறிக்கொண்டிருந்த அரசர்களுக்கு ஆரியர்களின் வர்ணாசிரமக் கோட்பாடு என்பது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது.
அரசர்களின் முதுகுக்குப் பின்னால் ஆரியர்களின் ராஜ்ஜியம் தொடங்கியது. சமஸ்கிருத மொழிக்குரிய ஆரியர்களைத்தவிர வேறு யாரையும் வர்ணாசிரமக் கோட்பாட்டை நிறுவுவதற்கு அரசர்கள் பயன்படுத்தவே முடியாது. இதற்காகத்தான் ஆரியர்கள் அன்றாட உரையாடல் மொழியிலிருந்து சமஸ்கிருதத்தைத் தவிர்த்தார்கள். இந்தியா முழுமைக்கும் தொழில் இரகசிய ஒருமை மொழியாக சமஸ்கிருதத்தைக் கட்டமைத்தார்கள். இதில் ஆரிய பிராமணர்களின் ஒற்றுமை என்றும் வியப்பிற்குரியதே. ஆரியக் கோட்பாட்டை  அரச மதமாக ஏற்றுக்கொண்ட அரசர்கள் பிராமணர்களுக்கு கோயில்களையும் குடியிருப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தார்கள். அனைத்து சலுகைகளையும் வழங்கினார்கள். பிரம்மதானம்தேவதானம்சதுர்வேதிமங்கலம் போன்ற முறையில் நிலங்களும் செல்வங்களும் பிராமணர்களுக்கு சொத்துக்களாக பெருகின.
பிராமணர்கள் எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் செல்வங்களை அனுபவிக்கக் கற்றுக்கொண்டார்கள். கடவுளின் பெயரால் எண்ணற்ற யாகங்களை நடத்தினார்கள். வர்ணாசிரமக் கோட்பாட்டை நாடெங்கும் பரப்பினார்கள். ஒவ்வொரு வர்ணத்திலும் உள்ள பல்வேறு மக்கள் பிரிவினரும் தொழில் பிரிவினரும் பல்வேறு சாதிப் படிநிலைகளாக விரிவு பெற்றார்கள். நாடெங்கும் படிநிலை சாதிகள் விரிவடைந்தன. எத்தனை விதமான சடங்குகளில் பிராமணர்கள் பங்கேற்கிறார்கள் என்பதிலிருந்து பிராமணர் அல்லாதவர்களின் சமூக மரியாதை சாதிகளாகத் தீர்மானிக்கப்பட்டன. பிராமணர்களின் பார்ப்பனியம் என்பது இரட்டை அரத்தங்களை சாராம்சமாகக் கொண்டிருக்கிறது. ஒன்று ஒருவரை பிறப்பால் அதிகாரம் செய்யக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக்கொள்ளச் செய்வது. மற்றொன்று பிறப்பால் தன்னை அடிமையாக செயல்பட கடமைப்பட்டவன் என்று ஒப்புக்கொள்ளச் செய்வது. பிராமணர்களை அழைத்து வேள்வி சடங்குகளை நிகழ்த்த தகுதியுள்ள சாதிகள் அக்கறையுடன் முயன்றார்கள். பிராமணப் பண்பாடு படிப்படியாக நிலைபெற்றது.
உழைக்காமல் செல்வங்களை அனுபவிப்பதில் வெற்றி பெற்ற பிராமணர்கள் உழைப்பில் ஈடுபட்ட காலங்களில் பயன்படுத்திய பல்வேறு கருவிகளைத் துறந்துவிட்டார்கள். தோலாலும் மரநார்களாலும் பயன்படுத்திய கட்டுக்கருவிகளின் மிச்சத்தை மட்டும் கைவிடத் துணியவில்லை. புனிதநூல் என்று விளக்கிக்கொண்டும் தோள்களில் மாட்டிக்கொண்டும் சட்டை இல்லாமல் திரிகிறார்கள். பிற சாதியினரும் இந்தக் கட்டுக் கருவியை புனிதநூல் என்று நம்பிக்கொண்டு தாங்களும் கட்டிக்கொள்வதற்கு தொடர்ந்து முயல்கிறார்கள். ஆனால் அந்த புனிதநூலின் சூட்சுமம் என்ன தெரியுமா
 

பிராமணர்களுக்கு ஆழ்மனதில் ஒரு அச்சம் இருக்கின்றது. மக்களுக்கு என்றாவது அறிவு முதிர்ச்சி ஏற்பட்டு உண்மையைக் கண்டுகொண்டால் என்ன செய்வதுவாரிச் சுருட்டியவற்றை முடித்துப்போட்டுக்கொண்டு ஓடுவதற்கு இந்த நூல் பயன்படும் என்ற நம்பிக்கையாக இருக்கலாம். மற்றொரு காரணமும் உண்டு. சத்திரியர்களின் பிறப்பிடமாகிய மார்பை புனித நூலால் கட்டிக்கொள்வது என்பது அரசும் அதற்கு கீழ்பட்டுள்ள ஒட்டுமொத்த சமூகங்களும் பிராமணக் கட்டுக்குள் கட்டுண்டுள்ளது என்பதை வார்த்தைகளன்றி பறைசாற்றிக்கொள்ளும் நடைமுறையாகவும் இருக்கின்றது. 


இந்திய வணிக நாகரிக வளர்ச்சியைக் காயடித்த இவர்களின் வர்ணாசிரம சாதிப்படிநிலை பண்பாடு நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது. வர்ணிக்க முடியாத அரக்கப் பண்புடன் முதிர்ந்து வருகிறது. வர்ணாசிரம சாதிப்படிநிலை பண்பாட்டின் ஆழ்மனதில் “தான் காயடிக்கப்படுவோமோ!” என்ற பயத்தை 17ம் நூற்றாண்டு உருவாக்கியது. வணிக நாகரிகத்தின் புதிய உருவமாக நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனியைச் சமாளிக்க முடியாமல் திணறியது. படிப்படியாக வாலை கால்களுக்கிடையில் ஒடுக்கிக்கொண்டு நிலவேந்தர்களைக் கைவிடத் தொடங்கியது. கம்பெனியின் இலாபவெறிக்கு சேவை செய்யும் செல்லப் பிராணியாக உருமாறியதால் இந்துத்துவம் என்ற பெயரில் பிழைக்கத் தொடங்கியது. சாவின் விளிம்பில் துடித்துப் பிறழும் முதலாளியக் கிழடு தனது மரண பதட்டத்தால் பேரழிவு நடவடிக்கைகளை நிகழ்த்தி வருகின்றது. இதன் நடவடிக்கைகளுக்குச் சேவையாற்றுகின்ற எடுபிடியாக இந்துத்துவம் வளர்ந்து வருகிறது. முசோலினியின் பாசிசமும் ஹிட்லரின் நாசிசமும் முதலாளியக் கிழடை உயிர்த்திருக்கச் செய்ததுபோல சமகால மோடியின் இந்துத்துவமும் சேவையாற்றி வருகிறது. கார்ப்பரேட் இலாப வெறியுடன் இந்துத்துவம் ஒட்டிப்பிணைந்ததால் கார்ப்பரேட் பாசிசமாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் உற்பத்தி சக்தியின் பிரமாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ள சமகாலத்தில் முதலாளியக் கிழடு மரணக்குழியில் வீழ்த்தப்படுவது உறுதியான விளைவாகும். கிழட்டு முதலாளியத்தை வீழ்த்துதல் நோக்கி உலகந்தழுவிய முயற்சியாக மக்கள் தலைமை அரசுகள் உந்தி வளர்கின்றன. இவற்றின் உந்து விசையால் வர்ணாசிரம சாதியப் பண்பாடு காயடிக்கப்பட்டு புதைக்கப்படும் என்பது தீர்க்க தரிசனம். இந்தியாவில் சாதிகளின் சதி உலகளாவிய முதலாளியச் சவத்துடன் உடன்கட்டை ஏறப்போவது உறுதி. இந்தியர்களின் இடது கரங்களில் கொல்லிக் கட்டைகள் சிவந்து எரிகின்றன.

எமது ஆய்வின்படி சாதி என்பது
வணிக சமூக வளர்ச்சியைத் தடுத்து
நிலப்பிரபுத்துவ சமூகம் நீடிப்பதற்காக
ஆரியர்கள் உருவாக்கிய
நான்கு வர்ணக் கொள்கைகளை
அரசர்கள் ஏற்று மக்களிடம்
 சூழ்ச்சிகளால் நடைமுறைப்படுத்திய சதி.

இக்கட்டுரையின் பொருண்மையைச் “சாதி ஸ்வாக” என்ற கதையிலும் விவரித்துள்ளேன். சாதிப்படிநிலையின் உருவாக்கம்  குறித்த இக்கட்டுரையின் முடிவைச் சரியென்று ஏற்றுக்கொள்வோர் இதன் மூன்று கோரிக்கைகளைக் கவனிக்க வேண்டும்.

1.சாதிகளின் இருப்பை புனிதப்படுத்தும் வர்ணாசிரம சமஸ்கிருத வேத இலக்கியங்களிலிருந்து இந்திய வரலாறை விளக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்.

2.திராவிட மக்களின் தாய்மொழிகளால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இலக்கியங்கள் மற்றும் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளிலிருந்து இந்தியர்களின் வரலாறுகள் விளக்கம் பெற முயல வேண்டும்.


3.சமூகமேன்மைக்கான சமூகவிஞ்ஞான முயற்சிகளில் சாதி ஒழிப்பிற்கான சமத்துவச் சமூகத் திட்டங்களில் சகமனிதராக ஒவ்வொருவரும் தோழமையுடன் பங்கேற்க வேண்டும்.

துணை செய்தவை
1. இந்தியாவில் சாதிகள் - டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்
2. சாதியம் - கோ.கேசவன்
3. மானிடவியல் கோட்பாடுகள் - பக்தவத்சலபாரதி
4. சாதி - தமிழ் விக்கிபீடியா
5. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தேறிகளே - செ.கார்கி, www.keetru.com
6. ஆரிய வருகை...அறிவியல் சொல்லும் உண்மை - டாக்டர். எழிலன் நாகநாதன் (www.youtube.com)
7. காதல் வரலாறு - புதியவன் (puthiyavansiva.blogspot.in)
8. காதலிலிருந்து கடவுள்வரை - புதியவன் (puthiyavansiva.blogspot.in)
9. அறிவெனும் பெரும் பசி - புதியவன்  (puthiyavansiva.blogspot.in)
10. அம்பேத்கர் பார்வையில் இந்து ராஷ்டிரம் ஒழிப்பு 1,2 
- எழுத்தாளர் வே.மதிமாறன் (www.youtube.com)
11. சாதியம் புகுந்ததும் பெயர்ந்ததும் ஏன்? – எழுத்தாளர் வே.மதிமாறன்  (www.youtube.com)
12. பார்ப்பனர் பண்பாட்டு படையெடுப்பு - எழுத்தாளர் வே.மதிமாறன்  (www.youtube.com)
13. பெரியாரின் போர்க்குணம் - எழுத்தாளர் வே.மதிமாறன்  (www.youtube.com)
14. தந்தை பெரியாரின் வானொலி பேச்சு - (www.youtube.com)
15. BJP மத அரசியலின் உச்சம் - தோழர் மருதையன் (www.youtube.com)
16. மனுதர்மத்தின் கொடூர வரலாறு - விடுதலை இராசேந்திரன் - (www.youtube.com)
17. இந்துமத எதிர்ப்பு ஏன்? - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (www.youtube.com)
18. இந்து என்பதன் விளக்கம் - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (www.youtube.com)
19. காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - எஸ்.ராமகிருஷ்ணன் (www.youtube.com)
20. மார்க்சியம் என்றால் என்ன? - தோழர் தியாகு (www.youtube.com)
21. பெரியாரியல் சுருக்கமான அறிமுகம் - விடுதலை ராசேந்திரன் (www.youtube.com)
22. பெரியார் மீதான விமர்சனங்கள்  - விடுதலை ராசேந்திரன் (www.youtube.com)
23. பழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய் தலைமை சமூகத்தின் எச்சம் – புதியவன்  (www.keetru.com)
24. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் பிரெடெரிக் எங்கெல்ஸ்.
26. வால்காவிலிருந்து கங்கைவரை  - ராகுல் சாங்கிருத்யாயன்
27. பொதுவுடைமைதான் என்ன? - ராகுல் சாங்கிருத்யாயன்
28. இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் - தேவிபிரசாத் சட்டோ பாத்யாய
29. சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள் - புதியவன் (puthiyavansiva.blogspot.in)
30.நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் – புதியவன் (puthiyavansiva.blogspot.com)
31.சாதி ஸ்வாக – புதியவன் (puthiyavansiva.blogspot.com)
32.தமிழகத்தில் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம் – தேன்மொழி (siragu.com)
33.தொல்காப்பியம் ; ஐந்திரத்தின் அத்துமீறல்கள் – கவிதா சரண் (www.keetru.com)
34.திராவிட உணர்வில் ஆரியமாக்கிய வீரவாகு, அரிச்சந்திரன் – முனைவர் சு.குமார் (பதிப்பிக்கப்படாத கட்டுரை)
35.“இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப” சங்ககால ஜாதிகள் – லண்டன் சுவாமிநாதன் (tamilandvedas.com)
36.இந்தியாவில் கம்பெனி ஆட்சி - ta.wikipedia.org 
37.சிந்து சமவெளியுடன் தொடர்புடைய தமிழர் ரகசியங்கள் - முனைவர்.ஆர்.பாலகிருஷ்ணன் IAS  (www.youtube.com)
38.சிந்து சமவெளி நாகரிகம் - முனைவர்.ஆர்.பாலகிருஷ்ணன் IAS  (www.youtube.com)
39.மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி) - திராவிடர் கழக வெளியீடு
40.யார் இந்து மதம் தெரியுமா? - பேராசிரியர் சுப. வீரபாண்டியன் (www.youtube.com)
41.தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்:இனவரைவியல் நோக்கு - கே.சிவக்குமார். https://puthiyavansiva.blogspot.com/2016/10/blog-post_79.html


வெளிவந்த விபரம்
'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 – 2991



யூடியூப் காணொளி

      இந்தியாவில் சாதிகள் உருவான கதை

https://www.youtube.com/watch?v=DbE3Lu1syOc


17 comments:

Puthiyavan said...

எழுத்தாளர் பேராசிரியர் க.பஞ்சாங்கம்-
நல்ல கட்டுரை . தெளிவாக இருக்கிறது.

Saraljo said...

அருமையான கட்டுரை.வாழ்த்துக்கள்.

Puthiyavan said...

புதிய பெண்ணியத் தோழர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்
அறிவன்புடன் புதியவன்

Puthiyavan said...

1*சாதியம் இந்துத்துவ கொள்கை*
சாதியம் என்னும் கொள்கை கோடிக்கணக்கானோரின் உயிரைக் குடித்த ஒரு கொடிய தத்துவம் என்பது இந்தியாவில் பிறந்த எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் தெரியும். அந்த கொள்கை யாரால் உருவாக்கப்பட்டது என்னும் முக்கியமான கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும். சாதி அடிப்படையில் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான் என்று இந்துத்துவம் கூறுகிறது. அந்த கருத்தை உறுதி செய்ய மனிதன் தோன்றிய வரலாற்றை ஆராயவேண்டும்.
இவ்வுலகில் மனிதன் தோன்றியது எப்படி என்பதைப் பற்றி பலரும் பல கொள்கைகளை சொல்கிறார்கள். என் அறிவுக்குத் தெரிந்த இரண்டு கொள்கைகளை இங்கே குறிப்பிடுகிறேன். மூன்றாம் கொள்கையை அடுத்த அத்தியாயத்தில் விளக்குகிறேன். அவற்றை ஆய்வு செய்தால் சாதிக்கொள்கை எங்கிருந்து வந்தது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளலாம்.
முதலாவதாக, மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று நாத்திகர்கள் சொல்கிறார்கள். குரங்கின் DNA-க்கும் மனிதனுடைய DNA-க்கும் சில ஒருமைப்பாடுகள் இருப்பதால்தான் மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்களாம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால் மனிதனிலிருந்து வேறு எந்த உயிரியும் வராதது ஏன்? என்னும் கேள்வி எழுகிறது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால் குரங்கு எங்கிருந்து வந்தது என்ற கேள்வி கேட்டால் குரங்கு வேறோரு உயிரியிலிருந்து வந்தது என்று பரிணாமக் கொள்கையாளர்கள் சொல்கிறார்கள். அந்த உயிரி எங்கிருந்து வந்தது என்று கேட்டால் *'நெபுலோஸ்'* என்னும் அணுவிலிருந்து வந்தது என்று கூறுகிறார்கள். *'நெபுலோஸ்'* எங்கிருந்து வந்தது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. இந்த கொள்கையைத்தான் நாத்திகர்கள் *மனிதத் தோற்றக் கொள்கையாக* நம்புகிறார்கள். ஆனால், ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றை உருவாக்குகின்ற ஒரு சக்தி இருக்குமானால் அதிலிருந்தே உலகமும் அதிலுள்ள உயிரினங்களும் உருவாகியிருக்கவேண்டும் என்றே நான் நம்புகிறேன்.
இரண்டாவதாக, பிரம்மாவின் தலையிலிருந்து *'பிராமணர்கள்'* என்ற சாதியினரும், பிரம்மாவின் தோள்பட்டையிலிருந்து *'க்ஷத்ரியர்கள்'* என்ற சாதியினரும், பிரம்மாவின் தொடையிலிருந்து *'வைஷ்யர்கள்'* என்ற சாதியினரும், பிரம்மாவின் பாதத்திலிருந்து *'சூத்திரர்கள்'* என்ற சாதியினரும், பிரம்மாவின் நிழலிலிருந்து *தீண்டத்தகாதவர்கள், தலித்துகள், தாழ்த்தப்பட்டவர்கள்* என்றெல்லாம் அழைக்கப்படும் *'பஞ்சமர்கள்'* என்ற கூட்டத்தினரும் தோன்றினார்கள் என்று இந்துத்துவம் கூறுகிறது. ஆக சாதியம் இந்துத்துவாவால் உருவாக்கப்பட்டது என்று அறிகிறோம்.
பஞ்சமர்கள், *அவர்ணர்கள்* ( வர்ண அமைப்பை சாராதவர்கள்-OUTCAST) என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால், இதில் கொடுமை என்னவென்றால், அவர்களே பல பிரிவுகளாக பிரிந்து தமிழ்நாட்டில் குளுவர், அருந்ததியர், பறையர், பள்ளர் என்று சாதி நம்பிக்கையாளர்களாக தங்களை *தாழ்த்தப்பட்ட சாதியினர்* என்று மாற்றிக்கொண்டனர். இவர்களில் ஒரு சாதிக்காரர் வேறொரு சாதிக்காரருக்கு பெண்கொடுப்பதும் இல்லை; பெண் எடுப்பதும் இல்லை. இதில் மகாகொடுமை என்னவென்றால் ஒரு சாதியிலேயே பல கிளைகள் உள்ளன. அதில் ஒரு கிளை சாதிக்காரர் வேறொரு கிளை சாதிக்காரரை திருமணம் செய்யமாட்டார். எடுத்துக்காட்டாக பறையர் என்னும் சாதிக்குள் 18 கிளை சாதிகள் உள்ளன. அதில் 'சங்கு' பறையர் 'கொங்கு' பறையரை ஏற்றுக்கொள்ளமாட்டார். பள்ளர்களில் 'ஆத்தா' பள்ளர் 'அய்யா' பள்ளரை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

(வாட்சப் பகிர்வு)
*அகில இந்திய கிறிஸ்தவ சாதி மறுப்பு இயக்கம் காஞ்சிபுரம்*

Puthiyavan said...

2. இந்துக்களின் 'புனித புத்தகமாக' போற்றப்படும் பகவத்கீதையில் கிருஷ்ணன் *_"சதுர் வர்ணம் மயா சிருஸ்டம்"_ (பகவத்கீதை 4:13)* என்று கூறுகிறார். அதன் அர்த்தம், *'மக்களை நானே நான்கு வர்ணங்களாக பிரித்தே படைத்தேன்'* என்பதாகும்.
*பிரம்மாவின்* முகத்திலிருந்து தோன்றியவர்கள் *'பிராமணர்கள்',* அவனுடைய தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் *'க்ஷத்ரியர்கள்',* அவனுடைய தொடையிலிருந்து தோன்றியவர்கள் *'வைஷ்யர்கள்',* அவனுடைய பாதத்திலிருந்து தோன்றியவர்கள் *'சூத்திரர்கள்'* (மனுநூல் 1:87) என்ற சாதி படிமானங்களை இந்துக்களும், பிற மதத்திலிருந்து இந்துத்துவாவுக்கு மாறுகிறவர்களும் பின்பற்றவேண்டும் என்று இந்துக்களுக்காக உருவாக்கப்பட்டது. *மனுநூல்* என்பதும் இந்துக்கள் மதித்து போற்றும் அவர்களுடைய மற்றொரு 'புனித' புத்தகமாகும்.
இதில் *பிராமணர்களுக்கு* இதர சாதியினராகிய க்ஷத்திரியர்கள், வைஷ்யர்கள், சூத்திரர்கள் என்பவர்கள் கீழ்சாதியினர் என்றும், *க்ஷத்திரியர்களுக்கு* வைஷ்யர்கள், சூத்திரர்கள் என்பவர்கள் கீழ்சாதியினர் என்றும், *வைஷ்யர்களுக்கு* சூத்திரர்கள் கீழ்சாதியினர் என்றும் வகுத்துள்ளார்கள்.
பிறப்பின் அடிப்படையில் மனிதனை *'கீழ்சாதி, உயர்சாதி'* என்று பிரிக்கும் இந்த கொடிய கொள்கை நிச்சயமாக நிஜமான கடவுளாலோ, மனிதநேயமுடைய மனிதர்களாலோ உருவாக்கப்பட்டிருக்க முடியாது. மனுதர்மத்தை வாசிக்கும்போது இந்து மதம் சமத்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது.
வருணாசிரமம் என்னும் சமூக விரோத சாதி பாகுபாட்டுக் கொள்கையை உருவாக்கியது இந்துத்துவம்தான் என்பதையும், அதன் கோர முகத்தின் கொடுமையையும் பற்றி இந்த அத்தியாயத்தில் விரிவாக ஆராய்வோம்.
*மனுநூல்* என்பது மனு என்னும் பிராமணரால் முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. அதற்கு அவர் வைத்த பெயர் *மனுஸ்மிருதி*. இது 2685 செய்யுட்களாகவும், 12 அத்தியாயங்களாகவும், 3 பகுதிகளாகவும் அமைந்துள்ளது. இது இந்துத்துவத்தை பின்பற்றத் தீர்மானித்தவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், வாழ்வியல் விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதை 1784-ம் ஆண்டு கொல்கத்தா உச்சநீதி மன்றத்தின் நீதியரசர் *சர் வில்லியம் ஜோன்ஸ்* என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். *திரிலோக சீதாராம்* என்பவர் அதை தமிழில் மொழிபெயர்த்தார். இது ஆங்கிலேயர்களின் காலனி அரசாங்கத்தால் இந்துக்களுக்கென்று உருவாக்கப்பட்ட இந்து சட்டம் (Hindu Law) உருவாவதற்கு உதவியாக இருந்திருக்கிறது.
சாதி பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை கீழ்க்காணும் சுலோகத்தின் மூலம் தெளிவாக அறியலாம்.
_பிராமணனுடைய தொழிலைச் சூத்திரன் செய்தாலும், சூத்திரன், பிராமண சாதியாக மாறமாட்டான். ஏன் என்றால் அவனுக்குப் பிராமண சாதித் தொழிலில் அதிகாரம் இல்லை அல்லவா? சூத்திரன் தொழிலைப் பிராமணன் செய்தாலும் பிராமணன் சூத்திர சாதியாக மாட்டான். ஏனென்றால், அவன் ஈனத்தொழில் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா? (மனுநூல் 10:73)_
*தண்டனைகள்*
மனுநூல் சட்டத்துக்குமுன் அனைவரும் சமமல்ல. ஒருவர் தவறு செய்தால் அவருடைய சாதியின் அடிப்படையில் தண்டனை கொடுக்கவேண்டும் என்று மனுநூல் கூறுகிறது.
_பிராமணனுக்கு அவதூறு இழைக்கும் சத்திரியனுக்கு 100 பணமும், அவ்வாறு தவறு இழைக்கும் வைஷ்யனுக்கு 150 அல்லது 200 பணமும், சூத்திரன் தவறு இழைத்தால் கசையடியும் விதிக்கவேண்டும். (மனுநூல் 8:267)_
*தொழில்கள்*
ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட தொழில் என்று நிர்ணயித்து, அவரவர் சாதிக்குரிய தொழிலை மட்டுமே செய்யவேண்டும் என்று மனுநூல் வகையறுத்துள்ளது. இதை *குலத்தொழில்முறை* என்கின்றனர். இதில் 'கீழ்சாதியினர்' தங்கள் குலத்தொழில் பிடிக்கவில்லை என்று அதைவிட்டு 'மேல்சாதியினர்' செய்யும் தொழிலை கற்கும் உரிமையைகூட மனுநூல் அவர்களுக்கு கொடுக்கவில்லை. இந்துத்துவ வருணாசிரம கோட்பாட்டில் தனிமனித கருத்துரிமை, பேச்சு உரிமை என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை.
(வாட்சப் பகிர்வு)
*அகில இந்திய கிறிஸ்தவ சாதி மறுப்பு இயக்கம் காஞ்சிபுரம்*

Puthiyavan said...

_சூத்திரனுக்கு கடவுள் கூறும் கடமை, அவன் மற்ற மூன்று வருணங்களுக்கும் தொண்டு செய்யவேண்டும் என்பதே (மனுநூல் 1:91)._
இவர்கள் எவ்வளவு அறிவாளிகளானாலும் தலைமுறை தலைமுறையாக தன் சேவகத்தொழிலையே செய்யவேண்டுமேதவிர *பிராமணர்கள், சத்திரியர்கள், வைஷ்யர்கள்* செய்யும் வேலையை செய்யும் உரிமை சூத்திரர்களுக்கு இல்லை. அப்படி செய்தால் தண்டிக்கப்படுவர் என்றும் வர்ணாசிரமம் தெளிவாக பதிவு செய்கிறது.
_சூத்திரன் தன் தொழிலைவிட்டு உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும் (மனுநூல் 9:96)._
_சூத்திரர்கள் முன்னிலையில் பிராமணர் வேதத்தைப் படித்துக் காட்டக்கூடாது (மனுநூல் 4:99)._
_சூத்திரன் மனப்பாடம் செய்யும் நோக்கத்துடன் வேதம் படிப்பதைக் கேட்டால், அவனது காதுகளில் காய்ச்சிய ஈயத்தையும், அரக்கையும் ஊற்றவேண்டும். அவன் வேதம் ஓதினால் ஓதிய நாக்கு துண்டிக்கப்படவேண்டும். வேதத்தில் முழு தேர்ச்சி அடைந்தால், அவனது உடல் துண்டு துண்டாக வெட்டி சிதைக்கப்படவேண்டும் (மனுநூல் 12:4)._
_பன்றி முகர்தலாலும், கோழிச் சிறகின் காற்றினாலும், நாயின் பார்வையினாலும், *சூத்திரன் தொடுதலினாலும்* உணவு அசுத்தமாகின்றது (மனுநூல் 3:241)._
_சூத்திரன், பிராமணர்களைத் திட்டினால் *அவன் நாக்கை அறுக்கவேண்டும்* (மனுநூல் 8:270)._
_சூத்திரன் பிராமணன் பெயர், சாதி இவைகளைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை நுழைக்க வேண்டும் (மனுநூல் 8:271)._
_சூத்திரன் பிராமணனைப் பார்த்து “நீர் இதைச் செய்ய வேண்டும்” என்று உபதேசம் செய்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் (மனுநூல் 8:272)._
_சூத்திரன் பிராமணனுடன் சம ஆசனத்தில் உட்கார்ந்தால், சூத்திரனுடைய *இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது அவனை *ஊரைவிட்டுத் துரத்தவேண்டும்;* அல்லது அவனது *ஆசனத்தில் ஒரு வெட்டுப்புண்* ஏற்படுத்தவேண்டும் (மனுநூல் 8:281)._
சங்கராச்சாரியை சந்திக்கச் சென்ற மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் மற்றும் APJ அப்துல் கலாம் போன்றவர்களை தரையில் உட்காரவைத்து பேசியிருக்கிறார் சங்கராச்சாரியார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விஜயேந்திரரை சந்தித்தபோது அவரை நிற்கவைத்து பேசியிருக்கிறார் விஜயேந்திரர். அதற்கு காரணம் அவர்கள் சூத்திரர்களாம். ஆனால், சுப்பிரமணிய சாமி என்னும் அரசியல்வாதி சங்கராச்சாரியாரை சந்திக்க போனபோது அவரை சரிசமமாக நாற்காலியில் அமரவைத்து பேசினார் பேசியிருக்கிறார். ஏனெனில் சுப்பிரமணிய சாமி பார்ப்பனராம். என்ன கொடுமை சார் இது!
(வாட்சப் பகிர்வு)
*அகில இந்திய கிறிஸ்தவ சாதி மறுப்பு இயக்கம் காஞ்சிபுரம்*

Puthiyavan said...

*பிராமணர்கள்* மட்டும்தான் ஆன்மீக பணிசெய்யவேண்டும். அவர்கள் மட்டும்தான் கல்வி கற்பிக்கும் வேலை செய்யமுடியும். பிறருக்கு அந்த தகுதி இருந்தாலும் அந்த வேலையை செய்யமுடியாது. வேதங்கள், மனுநூல், உபநிடதங்கள், பகவத்கீதை, இதிகாசங்கள் என்று எல்லா புத்தகங்களையும் *சத்திரியர்களுக்கும், வைஷ்யர்களுக்கும்* பிராமணர்களிடம் மனப்பாடமாக கற்றாலும் அதை பிறருக்கு கற்பிக்க அவர்களுக்கு உரிமை இல்லை.
_வேதம் கற்றலும், கற்றுத்தரலும் கடவுளால் பிராமணர்களுக்காக ஒதுக்கப்பட்டவையாகும் (மனுநூல் 1:88)._
_க்ஷத்திரியர்களை வேதம் படிக்கும்படி கடவுள் பரிந்துரைத்துள்ளார். (மனுநூல் 1:89)_
_வைஷ்யர்களும் வேதம் படிக்க கடவுள் பரிந்துரைத்துள்ளார். (மனுநூல் 1:90)_
ஆனால், தானாக வேதத்தைக் கற்பவர் நரகத்துக்கு போவாராம்.
_குருவின்றி வேதம் கற்பவர் வேதத்தைத் திருடிய தண்டனைக்கு உள்ளாகி, நரகத்தில் உழல்வர். (மனுநூல் 2:116)_
ஒரு அநியாயத்தை பாருங்கள்.
_பிராமணன் தன் குலத்தொழிலை செய்யமுடியாவிட்டால் க்ஷத்திரியனுக்குரிய தொழிலை செய்து பிழைத்துக்கொள்ளலாம். இதுதான் அவனுக்குரிய அடுத்த குலத்தொழில் ஆகும். பிராமணன் தன் குலத்தொழில், க்ஷத்திரியருக்குரிய தொழில், ஆகியவற்றைச் செய்ய முடியாவிட்டால், வைஷ்யனுக்குரிய வாணிபம் செய்தும், உழுது பயிரிட்டும், கால்நடைகளை மேய்த்தும் வாழ்க்கையை நடத்தலாம். (மனுநூல் 10:81,82)_
*சத்திரியர்கள்* மக்களை பாதுகாக்கும் வேலையை செய்யவேண்டும். *வைஷ்யர்களுக்கும், சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும்* அதை செய்ய உரிமை இல்லை.
*வைஷ்யர்கள்* வாணிபம் செய்தல், கால்நடைகளை மேய்த்தல், கொடையளித்தல், வட்டிக்கு கடன் கொடுத்தல், நிலத்தில் பயிரிடுதல் என்னும் வேலைகளை செய்யவேண்டும். *சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும்* அதை செய்ய உரிமை இல்லை.
பெண்கள் வேதம் கற்கக்கூடாது என்ற கொடிய சட்டத்தை மனுநூல் போதிக்கிறது.
_வேதபாடத்துக்கும் பெண்களுக்கும் தொடர்பேதும் இல்லை (மனுநூல் 10:18)._
*சூத்திரர்களின் இழிநிலை*
சூத்திரன் என்னும் பெயர் 7 விதமானவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடியவன்.
2. யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்.
3. பிராமணனிடத்தில் பக்தியோடு தொண்டு செய்பவன்.
*4. விபச்சாரி மகன்*
5. விலைக்கு வாங்கப்பட்டவன்.
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.
7. தலைமுறை தலைமுறையாக தொண்டு செய்பவன். (மனுநூல் 8:415).
*சூத்திரர்கள்* அவர்களுக்கு மேலிருக்கும் மூன்று பிரிவினருக்கும் தொண்டு ஊழியம் செய்யவேண்டும் என்று வர்ணாசிரமம் கூறுகிறது.
(வாட்சப் பகிர்வு)
*அகில இந்திய கிறிஸ்தவ சாதி மறுப்பு இயக்கம் காஞ்சிபுரம்*

Puthiyavan said...

3. பிராமணனுடைய தலைமயிர் தாடி, மீசை, கால், கழுத்து, விதை இவைகளைப் பிடித்து இழுத்த சூத்திரனின் கைகளை யோசிக்காமல் வெட்டவேண்டும் (மனுநூல் 8:283)._
_சூத்திரன் பிராமணனை எந்த அங்கத்தினால் தாக்கினானோ அல்லது புண்படுத்தினானோ அந்த அங்கத்தை துண்டிக்கவேண்டும் (மனுநூல் 8:279)._
_சூத்திரன் வருணாசிரமப்படி நடக்காவிட்டால், பிராமணர்கள் ஆயுதமேந்தி அவர்களை தாக்கவேண்டும் (மனுநூல் 8:348)._
ஒவ்வொரு சாதிக்காரனும் அந்தந்த சாதிக்குள்தான் திருமணம் செய்யவேண்டும்; அதற்கு *அகமணமுறை* என்று பெயர். பிறசாதிக்காரனை திருமணம் செய்யும் உரிமை இல்லை. பிறசாதிக்காரனை திருமணம் செய்தால் அதற்கு *புறமணமுறை* என்று பெயர். புறமணமுறையில் திருமணம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும்; அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சமூகத்தில் புறக்கணிக்கப்படும்
_உயர்குலத்துப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் சூத்திரனுக்கு கசையடி கொடுக்கவேண்டும் (மனுநூல் 8:366)._
_சூத்திரன் மனைவி சூத்திரச்சியாகவே இருக்க வேண்டும் (மனுநூல் 3:13)._
_அரசன் சூத்திரனை பிராமணர் போன்ற உயர்சாதியினருக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்கவேண்டும் (மனுநூல் 8:410)._
_சூத்திரனுக்கு கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்கலாம் (மனுநூல் 8:413)._
_பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால், அடிமையாகிய சூத்திரன் எவ்வித பொருளுக்கும் உரிமையாளனாகமாட்டான் (மனுநூல் 8:417)._
_பிராமணனால் சூத்திர பெண்ணுக்கு பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு தந்தையின் சொத்தில் பங்கு இல்லை (மனுநூல் 8:455)._
_சூத்திரன் பிராமணனை கையினாலும் தடியினாலும், அடித்தால் கையையும் , உதைத்தால் காலையும் வெட்டிவிடவேண்டும் (மனுநூல் 9:280)._
_சூத்திரன் பிராமண சாதிக்குறியான பூணுால் முதலியதைத் அணிந்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிடவேண்டும் (மனுநூல் 9:224)._
_சூத்திரன் பிராமணர் பொருளை அபகரித்தால், சூத்திரனை சித்ரவதை செய்து கொல்லவேண்டும் (மனுநூல் 9:248)_
_சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானாகிய பிராமணனுக்கு சேரவேண்டுமே தவிர சம்பாதித்தவனுக்கு சேராது (மனுநூல் 9:416)._
_பிராமணன் சாப்பிட்டு மீந்த எச்சில் உணவு, உடுத்தி கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம் இவைகளை பிராமணன் சூத்திரனுக்கு வாழ்வாதாரமாக கொடுக்கவேண்டும் (மனுநூல் 10:125)._
_சூத்திரன் கட்டாயம் பிராமணர்களுக்கு தொண்டூழியம் செய்யவேண்டும் (மனுநூல் 10:122)._
_சூத்திரன் தன்னால் பொருள் திரட்ட முடியும்போதும் அவ்வாறு திரட்டி செல்வம் சேர்க்கக்கூடாது. ஏனெனில், செல்வந்தனான சூத்திரன் பிராமணனுக்கு துன்பம் தருகிறான் (மனுநூல் 10:129)._
_செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும், கேளாமலும், பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம் (மனுநூல் 11:13)._
(வாட்சப் பகிர்வு)
*அகில இந்திய கிறிஸ்தவ சாதி மறுப்பு இயக்கம் காஞ்சிபுரம்*

Puthiyavan said...

*பிராமணர்களின் உயர்நிலை*
_பிராமணன் பிரஜாபதியின் முகத்திலிருந்து தோன்றியதாலும், முதலாவதாக தோன்றியதாலும், வேதங்களைப் பெற்றிருப்பதாலும் படைப்புக்கெல்லாம் தலைவனாகும் உரிமை உடையவன் (மனுநூல் 1:93)._
_படைப்புப் பொருட்களில் உயிருடையவை சிறந்தவை; உயிருள்ளவற்றுள் அறிவுள்ளவை சிறந்தவை; அறிவுள்ளவற்றில் மனிதன் சிறந்தவன்; மனிதருள் பிராமணர் சிறந்தவர் (மனுநூல் 1:96)._
_பிராமணனைக் காப்பாற்றும்பொருட்டு பிராமணன் அல்லாதவரை கொல்வது பாவம் அல்ல (மனுநூல் 8:143)._
_அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால், அதில் பாதியை பிராமணர்களுக்கு தானம் செய்து மீதியை அரசு கருவூலத்தில் சேர்க்கவேண்டும் (மனுநூல் 8:38)._
_பிராமணன் எத்தகைய கொடிய பாவம் செய்தாலும் அவனைக் கொல்லக்கூடாது; அவன் தலையை மொட்டை அடிப்பதே மரண தண்டனையாகும். பிறருக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் (மனுநூல் 8:379)._
_எத்தகைய பாவம் செய்தாலும், பிராமணனை கொல்லாமலும், அவன் பொருளைக் கவர்ந்துகொள்ளாமலும் ஊரைவிட்டு துரத்தவேண்டும் (மனுநூல் 8:380)._
_பிராமணனைக் கொல்வதைவிட உலகத்தில் பெரிய ஒரு பாவம் இல்லை. எனவே, பிராமணனைக் கொல்வதுபற்றி அரசு நினைக்கவேகூடாது (மனுநூல் 8:381)._
_அறிவாளியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம் (மனுநூல் 9:317)._
_ஒளியுள்ள தீ மயானத்தில் பிணத்தை எரித்தாலும், நிந்தனை இல்லாமல் எப்படி வேள்வியில் வளர்க்கப்படுகிறதோ அப்படியே பிராமணன் கெட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் வணங்கத்தக்கவன்; மேலானவன் (மனுநூல் 9:318)._
_பிறப்பினால் உயர்ந்த இடத்திலிருந்து தோன்றியதாலும், உயர்ந்த குலத்தாலும், வேதங்களை பிழையறக் கற்றுணர்ந்த அறிவினாலும், பூணூல் அணிந்துள்ள சிறப்பினாலும் பிராமணன் அனைத்து வருணத்தாருக்கும் தலைவனாக உள்ளான் (மனுநூல் 10:3)._
_சூத்திரனுக்கு பிராமணப் பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணன் இல்லாத இடத்தில் க்ஷத்திரியனுக்கோ, க்ஷத்திரியன் இல்லாவிட்டால் வைஷ்யனுக்கோ தொண்டு செய்யவேண்டும். அதிகமான பசுக்களையும், செல்வங்களையும் வைத்திருக்கிறவன் பிராமணன் கேட்டு கொடுக்காவிட்டால் களவு செய்தாவது அல்லது பலாத்காரம் செய்தாவது பிராமணன் எடுத்துக்கொள்ளலாம் (மனுநூல் 11:12)._
_திருடிய பிராமணனை தண்டிக்கக்கூடாது (மனுநூல் 11:20)._
_பெண்களையும் சூத்திரரையும் கொல்வது மிகவும் சிறிய பாவமாகும் (மனுநூல் 11:66)._
_ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்யவேண்டிய பிராயச்சித்தம் எதுவோ அதைத்தான் சூத்திரனைக் கொன்றால் செய்யவேண்டும் (மனுநூல் 11:131)._
(வாட்சப் பகிர்வு)
*அகில இந்திய கிறிஸ்தவ சாதி மறுப்பு இயக்கம் காஞ்சிபுரம்*

Puthiyavan said...

*கடவுள்தான் மனிதனை சாதிவாரியாக பிரித்து படைத்தார்* என்று இந்துத்துவாவின் மதபுத்தகங்கள் சொல்வதால் சாதியில்லா சமூகத்தை சாதியால் அதிகமாக பாதிக்கப்பட்ட சூத்திரராலும் பஞ்சமராலும்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியே ஒரு இந்துத்துவ நம்பிக்கையாளர் சாதியத்துக்கு எதிராக செயலாற்றினால் இந்துத்துவாவுக்கு எதிராக அவர் துரோகம் செய்கிறார் என்று அர்த்தம். அவர்கள் அவர்களுடைய இந்துத்துவ கொள்கைப்படி வாழ்கிறார்கள். ஏற்றத்தாழ்வு என்னும் சாக்கடையில் சொறிந்துகொண்டே சுகமாக வாழக் கற்றுக்கொண்டார்கள். இந்துத்துவ கொள்கைகள் இந்துக்களுக்கே தீங்கானவை என்பது இன்றைய இந்துக்களில் பலருக்கும் தெரியாது. *"இந்துத்துவாவின் அஸ்திபாரமே சாதியம்தான். சாதி படிமானங்கள் அழிந்துவிட்டால் இந்துத்துவாவே அழிந்துவிடும்"* என்று சங்கராச்சாரியார் கூறியிருக்கிறார். எனவே, இந்துமதம் அழிந்துவிடும் என்னும் தன்மான பிரச்சனையால்தான் இந்த சாத்தானிய சாதியத்தை இந்துக்கள் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
RSS ( ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க்) இயக்கத்தினர் தங்கள் வேதபுத்தகம் என்று கூறிக்கொள்வது அவர்கள் தலைவர் *கோல்வால்கர்* எழுதிய *'Bunch of Thoughts'* எனும் புத்தகம். இதை அவர்களால் மறுக்க முடியாது. மறுப்பவர்கள் RSS-ல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட அந்த புத்தகத்தில் அவர்கள் கனவு காணக்கூடிய இந்து ராஷ்டிரத்தின் இலக்கணம் என்ன தெரியுமா? இதோ படியுங்கள்.
“தென்னாட்டில் ஓர் ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த 'நாயுடு' வகுப்பைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு 'பிராமணர்'. ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது ‘பிராமண’ பியூன் தன்னை பின்தொடர வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சாதிக்காரர் வந்தார்; ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து கைகுலுக்கினார். ஆனால், பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத்தொட்டு வணங்கினார். அதைப்பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி, "நான் உன்னுடைய பெரிய அதிகாரி; என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால், என்னுடைய பியூனின் காலைத் தொட்டு கும்பிடுகிறாயே! ஏன் இப்படி?" என்று கேட்டார். அதற்கு அந்த உதவியாளர், "நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனால், நீங்கள் ஒரு மிலேச்சர் (இழிகுலத்தவர்); அவர் ஒரு பியூனாக இருக்கலாம். ஆனால், நாங்கள் கடவுளுக்கு சமமாக வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழவேண்டியது எனது கடமை" என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம்”. (கோல்வால்கர் எழுதிய *'Bunch of Thoughts'* நூல் பக்கம் 138-139). கல்வியறிவில் குறைந்தவராக இருந்தாலும், தன்னைவிட குறைவான பொறுப்பில் பணிசெய்பவராக இருந்தாலும் பரவாயில்லை. 'பிராமணன்' என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் வணங்குவதற்கான தகுதியுடையவர் என்கிறார் கோல்வால்கர். அது மட்டுமல்லாமல் அதுதான் இந்து தர்மம் என்கிறார்.
(வாட்சப் பகிர்வு)
*அகில இந்திய கிறிஸ்தவ சாதி மறுப்பு இயக்கம் காஞ்சிபுரம்*

Puthiyavan said...

4. பிராமணர்கள் கடவுளுக்கு சமமாக வணங்கத்தக்கவர்கள் என்பதை கீழ்காணும் ரிக்வேத வசனத்தின்மூலம் இந்துக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
_தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத். (ரிக் வேதம் 62:10)_
இந்த சமஸ்கிருத சுலோகத்தின் அர்த்தம்: "இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழவேண்டும்."
*இந்தியாவின் அன்றைய நிலை*
ஒருமுறை பெரியார் சொன்னார், " மலத்தை தீண்டியவன் கையை மட்டும் கழுகினால்போதும்; ஆனால் பஞ்சமனைத் தீண்டினால் உடல் முழுவதையும் கழுகவேண்டும் என்று இந்துத்துவா கூறுகிறது".
தாழ்த்தப்பட்டவர்கள், பார்ப்பன தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து கூடச் செல்லக்கூடாது.
தாழ்த்தப்பட்டவர்கள் முழங்காலுக்குக் கீழும், இடுப்புக்கு மேலும் ஆடை அணியக்கூடாது.
தாழ்த்தப்பட்டவர்கள் தங்க நகைகள் அணியக் கூடாது.
தாழ்த்தப்பட்டவர்கள் மண் குடத்தில்தான் தண்ணீர் பிடிக்கவேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.
தாழ்த்தப்பட்டவர்கள் சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.
தாழ்த்தப்பட்டவர்கள் திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.
தாழ்த்தப்பட்டவர்கள் பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக்கூடாது.
தாழ்த்தப்பட்டவர்கள் குதிரை மீது ஊர்வலம் செல்லக்கூடாது.
தாழ்த்தப்பட்டவர்கள் பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக்கூடாது.
தாழ்த்தப்பட்டவர்கள் மேல்அங்கியோ, துண்டோ அணிந்து கொண்டு செல்லக்கூடாது.
தாழ்த்தப்பட்டவர்கள் ‘உயர்சாதி’ குடியிருப்பின் வழியாக சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.
தாழ்த்தப்பட்டவர்கள் நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.
(வாட்சப் பகிர்வு)
*அகில இந்திய கிறிஸ்தவ சாதி மறுப்பு இயக்கம் காஞ்சிபுரம்*

Puthiyavan said...

*இந்தியாவின் இன்றைய நிலை*
சாதியம் என்பது இந்தியரில் பெரும்பான்மையானோர் பன்னெடுங்காலமாக சிக்கித் தவிக்கும் துர்நாற்றக்கிடங்கு. இதிலிருந்து யாராவது எங்களைக் காப்பாற்றமாட்டார்களா என்று *சுயமரியாதையுடைய* எல்லா இந்தியர்களும் ஆவலோடு ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டை ஆட்சிசெய்யும் அரசியல்வாதிகள் யாராவது ஒரு புரட்சிகரமான சட்டத்தைப் பிறப்பித்து இந்த அடிமைநுகத்திலிருந்து எங்களைக் காப்பாற்றமாட்டார்களா? என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால், *அரசியலே சாதியம் என்னும் அஸ்திபாரத்தின்மீதுதான் கட்டப்பட்டுள்ளது* என்பதுதான் நிதர்சனமான உண்மை. சாதியின் பெயரைச் சொல்லி திட்டினாலே கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் *வன்கொடுமை தடுப்பு சட்டம்* நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் மக்களுக்குள் கொஞ்சம் பயம் உருவானதேதவிர, சாதி பாகுபாட்டு மனப்பான்மையை அவர்கள் மனப்பூர்வமாக விட்டுவிடவில்லை. சாதியம் என்பது இந்துத்துவ மத போதனையாக, ஆன்மீக உபதேசமாக கடைபிடிக்கும் மக்களால் எப்படி சாதியை விட்டுவிட முடியும்?
திரைப்படங்கள்மூலம் இந்த சமுதாய பிரச்சனைக்கு தீர்வுகிடைக்கும் என்று பலர் கருதினர். ஆனால், அதிலும் பெரிய பயனில்லை என்று கண்டுபிடித்து, கடைசியாக அவர்கள் எதிர்பார்த்த சமூக விடுதலைக்காக ஆன்மீகவாதிகளிடம் தேடினர். ஆனால், கிட்டத்தட்ட எல்லா ஆன்மீகவாதிகளும் சாதிச் சாக்கடையில்தான் கிடக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடித்துவிட்டனர். இப்போது விரக்தியில் மாற்றுப் பாதையைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
தண்டவாளங்களிலும், தூக்குக் கயிறுகளிலும், தற்கொலை என்ற பெயரில் விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் சாதியின் பெயரால் கெளரவக் கொலை செய்யப்படுவது அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட சாதியக் கொலைகள் நடந்துள்ளன. அதில், 70 சதவீதத்துக்கும் அதிகமாக 'தலித்துகள்தான்' கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 80 சாதிய ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன.
*மதுரையிலிருந்து தேவகோட்டைக்கு* செல்லும் சாலையில் இருக்கும் *கண்டதேவி* என்னும் ஊரில் இருக்கும் *சொர்ணமூர்த்தீஸ்வரர்* கோயில் தேர் இழுக்கும்போது, *'தாழ்த்தப்பட்டவர்கள்'* வடத்தை பிடிக்கக்கூடாது என்று ஆதிக்கசாதியினர் ஆண்டுதோறும் தடை செய்கின்றனர்.
*விருதுநகர்* மாவட்டத்தில் உள்ள *உளுத்திமடை* கிராமத்தில் கோயிலுக்குள் நுழைய முற்பட்ட ஏழு தலித்துகள் சாதி இந்துக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
(வாட்சப் பகிர்வு)
*அகில இந்திய கிறிஸ்தவ சாதி மறுப்பு இயக்கம் காஞ்சிபுரம்*

Puthiyavan said...

சென்னை மின்சார இரயிலில் ஒருமுறை *மக்கள் கலை இலக்கிய கழகத்தினர்* கீழ்கண்டவாறு பிரச்சாரம் செய்தார்கள்.
_இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்கிறார்கள், சரி தான், ஆனால், ஒரு மதம் என்கிற வகையில் மதங்கள் பக்தனுக்கு வழங்கக்கூடிய அடிப்படையான வழிபாட்டு உரிமையை இந்து மதம் அனைத்து இந்துக்களுக்கும் வழங்கியிருக்கிறதா என்றால் இல்லை. பக்தன் தனது கடவுளை தொட்டு வணங்கி பூஜிக்கும் உரிமையை இந்து மதம் அனைவருக்கும் வழங்கவில்லை. நீங்கள் கோவில் வாசல்படி வரைதான் போகமுடியும், அதற்கு மேல் ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாது, மீறி எடுத்து வைத்தால் அங்கு வன்முறை வெடிக்கும். இன்றுவரை ஆகமவிதிகளின்படி அமைந்த கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்களைத் தவிர வேறு எந்த இந்துவும் நுழைய முடியாது. இதுதான் இந்து மதம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இதுதான் நிலைமை. இதை எதிர்த்துத்தான் தந்தை பெரியார் *1970-ல் கருவறை நுழைவுப் போராட்டத்தை* அறிவித்தார். உடனே அன்றைக்கு இருந்த தி.மு.க அரசு அனைவரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. பார்ப்பனர்கள் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை வாங்கினார்கள். தமிழக அரசு அதற்கெதிராக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதன்பிறகு கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து 2006 இல் தி.மு.க அரசு அனைவரையும் அர்ச்சகராக்கும் அரசாணையை வெளியிட்டு, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி ஒன்றையும் துவங்கியது. அதில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தார்கள். அவர்களில் 206 மாணவர்கள் முறையாக ஆகம விதிகளை கற்று, சமஸ்கிருத வேதங்கள், ஸ்லோகங்களை கற்று தீட்சையும் பெற்று கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருந்த தருணத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் பார்ப்பனர்கள் மறுபடியும் உச்சநீதி மன்றத்தில் நியமனத்திற்கு தடை வாங்கினார்கள். இதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? என்னைத் தவிர எவனும் கோவில் கருவறைக்குள் வரக்கூடாது என்கிறார்கள். இந்துக்களில் பார்ப்பனர்கள் வெறும் மூன்று சதவிகிதம் தான். மூன்று சதவிகிதம் உள்ள பார்ப்பன கும்பல் மிச்சமுள்ள தொண்ணூற்று ஏழு சதம் இந்துக்களை, அதாவது பெரும்பான்மையான இந்துக்களை கோவில் கருவறைக்குள் விட மறுப்பது ஏன்? இது தான் மிக முக்கியமான கேள்வி. நீங்கள் இந்தியாவின் ஜனாதிபதியாகலாம், பிரதமர் கூட ஆகிவிடலாம். ஆனால், கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது ! ஏனென்றால், பெரும்பான்மை மக்களை இந்து மதம் சூத்திரன், பஞ்சமன் என்கிறது. சூத்திரன் என்றால் என்ன தெரியுமா? *வேசியின் மக்கள்* என்று அர்த்தம். அந்த "வேசி மக்கள் சாமியை தொட்டால் சாமி தீட்டாகி தன் சக்தியை இழந்துவிடும்" என்கிறார்கள் பிராமணர்கள். அதனால்தான் பிறப்பிலேயே உயர்ந்தவனாகிய என்னைத்தவிர எவனும் உள்ளே வரக்கூடாது என்கிறார்கள்._
(வாட்சப் பகிர்வு)
*அகில இந்திய கிறிஸ்தவ சாதி மறுப்பு இயக்கம் காஞ்சிபுரம்*

Puthiyavan said...

*சம்புகன் கதை*
சம்புகனின் கதை வால்மீகி அருளிய இராமாயணத்தில் உள்ளபடி எழுதுகிறேன்.
இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்துகொண்டிருந்தார்.
அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன்.
வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து, _"நீர் யார்? என்ன நடந்தது?"_ என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார்,
_"ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான்; ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம்; எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு"_ என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர்.
மனம் கலங்கிப் போன ராமன், _"என் ஆட்சியில் தர்மம் அழிகிறதா? அப்படி என்ன நடந்தது?"_ என்று தேவலோக ஞானிகளையும் அழைத்து கேட்கிறார்.
அந்த ஆலோசனை சபைக்கு வந்திருந்த திரிலோக சஞ்சாரியான நாரதர் கூறினார்.
_"ராமா உன் ஆட்சியில் நீ தர்மத்தை நல்லபடி காத்து வருகிறாய்; அப்படி இருந்தும் இந்த பிராமணப் பிள்ளையின் அகால மரணம் ஏற்பட்டுள்ளதென்றால் சனாதன தர்மத்தை மீறி ஏதோ செயல் நடந்திருக்கலாம்"_
மேலும் இராமன் விளக்கம் கேட்க நாரதர்,
_"சூத்திரர்கள் யாரேனும் வேதம், தவம் இவற்றில் ஈடுபட்டிருக்கலாம்; சூத்திரர்கள் கற்பதும் தவம் செய்வதும் கலியுகத்தில்தான் நடக்கும். இந்த யுகத்தில் நடக்காது. அவ்வாறு நடந்தால் அது தர்மத்திற்கு எதிரானது. அதைத் தேடி தடுத்து நிறுத்தினால் இந்த பிராமணப் பிள்ளை பிழைக்கும்"_ என்றார்.
உடனே தன் வில் அம்பு வாள் சகிதம் புறப்பட்ட இராமன் தான் திரும்பி வரும்வரை அந்த சிறுவனின் சடலம் கெட்டு விடாமல் மருந்துத் தைலங்களை பெரிய பாத்திரத்தில் நிறைத்து அதில் அந்த உடலைப் பாதுகாத்து வரும்படி ஆணையிட்டான்.
கோபத்துடன் தன் புஷ்பக விமானத்தில் ஏறி பல திசைகளையும் பார்த்துக் கொண்டு வந்த இராமன் *சரயு* நதிக் கரையில் வியக்கத்தக்க தேஜஸுடன் ஒருவர் தலைகீழாக நின்று உக்ர தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு விமானத்தை இறக்கி, அவர் அருகில் சென்று, _"தவசிரேஷ்டரே நீர் யார்? எதற்காக இந்த தவம் செய்கிறீர்கள்?"_ என்று கேட்க
தவநிலையில் இருந்தபடியே அந்த தவசி சொல்கிறார், _"என் பெயர் சம்புகன் . நான் சொர்க்கத்திற்கு செல்வதற்காக இந்த உக்கிர தவம் புரிகிறேன் நீங்கள் யார்?"_ என்று கேட்கிறார் சம்புகன்.
_"நான் ஸ்ரீ ராமச்சந்திரன் . இத்தவம் செய்யும் செய்யும் நீர் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்? பிராமணரா அல்லது ஷத்திரியரா? வைசியரா இல்லை சூத்திரரா சொல்லுங்கள்"_ என்று கேட்க, சம்புகன் கூறினார், _"ஸ்ரீ ராமச்சந்திர பிரபு நான் உம்மைக் கண்டது என் பேறு; நான் சூத்திர யோனியில் பிறந்தவன்"_ என்றார் சம்புகன். அதைக் கேட்டவுடன் ஒரு நொடியும் தாமதிக்காது ராமன், _"அப்படியானால் நான் என் கடமையைச் செய்ய வேண்டும்"_ என்று கூறியபடி தன் பளபளக்கும் வாளை உருவி சம்புகனின் தலையை சீவினார்.
சம்புகனின் தலை வேறு உடல் வேறாக விழுந்த உடன் வானுலகில் இருந்து தேவர்கள் மகிழ்ந்து பூமாரி பெய்தனர். அதே நேரத்தில் தைலக் கொப்பறையில் வைக்கப்பட்டிருந்த பிராமண சிறுவனின் சடலம் உயிர் பெற்று அச்சிறுவன் எழுந்தோடி வந்தான். அவனைக் கண்ட அந்த பிராமணர் மகிழ்ந்து இராமனை வாழ்த்தினார். இதுதான் இந்துத்துவ சாதி கொடுமையின் வெளிப்பாடு.
*'இறைவன்தான் சாதியை பிரித்தான்'* என்று *சித்தர்கள், மத தலைவர்கள், சாஸ்திரிகள், குருக்கள், ஆன்மீகஞானிகள், ஆச்சாரியார்கள், சாமியார்கள், யோகிகள்* சொன்னார்கள் என்று பகுத்தறிவற்ற சாதிவெறியர்கள் நம்பலாம். ஆனால், பிறரன்பு உடையவர்கள், உண்மையான கடவுளை அறிந்தவர்கள் இதுபோன்ற மனசாட்சிக்கு ஒவ்வாத எந்த குப்பைகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
வேதங்கள், வேதாந்தங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என்று எந்த நூல் என்ன சொன்னாலும், அது சரியான ஆன்மீகமா, அது நம் பகுத்தறிவுக்கு ஒத்துவருகிறதா என்று ஆராய்ந்து நிதானமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். நம் வாழ்க்கையை நாமே வாழவேண்டும். அதைப் பிறர் வாழவிடக்கூடாது.
(வாட்சப் பகிர்வு)
*அகில இந்திய கிறிஸ்தவ சாதி மறுப்பு இயக்கம் காஞ்சிபுரம்*

Puthiyavan said...


Balasingam Athimoolam
balasingam1951@gmail.com

Feb 28, 2019, 3:16 AM

DEAR COM. புதியவன் ,
BEST WISHES.

CONGRATULATIONS
THE EDITORIAL BD. DECIDED TO PUBLISH
இந்தியாவில் சாதிகளின் சதி IN
LEADING R.JLS PROF.N.VANAMAMALAIS` "ARAYCHI"
& DR. ME.THU.RAJKUMAR`S "SAMOOGA VIGNANAM"


REGARDS
LIBRARIAN

Puthiyavan said...
This comment has been removed by the author.
Puthiyavan said...

ஆய்வு: இந்தியாவில் சாதிகளின் சதி (சமூகவிஞ்ஞான ஆய்வு)
Saturday, 19 October 2019 07:02 - புதியவன் - ஆய்வு
'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்! | ISSN 1481 – 2991
https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5435:2019-10-19-12-03-36&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

அதிகம் படித்தவை