எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, June 6, 2018

எது அறிவு?

எது அறிவு?
புதியவன்

உலகப் பொருட்களைஅறிந்துகொள்கின்ற நடத்தை முறையே அறிவு ஆகும்.
அறிவு இரண்டு நிலைப்படும்.
1.புலனறிவு, 2.செயலறிவு
கண், காது, மூக்கு, நாக்கு, மெய் ஆகிய ஐந்து புலன்களால் அறிவது புலனறிவு ஆகும்.
எண்ணங்களை சிந்தனையில் ஈடுபடுத்தி கருத்துக்களாக அறிவது செயலறிவு ஆகும்.
செயலறிவு மூன்று நிலைப்படும்.
1.தகவல் அறிவு, 2.துறைசார்ந்த அறிவு, 3.சமூக அறிவு
பல்வேறுபட்ட தகவல்களை அறிவது தகவலறிவு ஆகும்.
ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவினைப் பெறுவது துறைசார்ந்த அறிவாகும்.
சமூக உற்பத்திமுறை, பண்பாடு பற்றிய முழுதளாவிய அறிவினைப் பெறுவது சமூக அறிவாகும்.
புலனறிவு ஐந்தும் ஆறாவது செயலறிவும் ஆகும்.
வெவ்வேறு தலைமுறைகளும் சகமனிதர்களும் தமக்குள் அறிவை பரிமாறுகின்ற நடத்தையால் அறிவது ஏழாம் அறிவாகும்.

இதனை அறிவுபரிமாற்றவழி அறிவு என குறிப்பிடலாம்.

No comments:

அதிகம் படித்தவை