கவி படை
புதியவன்
வாசித்தலும் வழிநடத்தும் யோசித்தலும் வழிநடத்தும்
வழிவழியாய் பட்டவரின் வாய்மொழியும் வழிநடத்தும்
நடைநடையாய் நடந்தாலும் உலகநோக்கு வளரனும்
கற்பனையால் குழைத்துவிடு கவிதையாக மணத்திடுமே
(பாரதியார் கவிதை பயிலரங்கம் 10.12.2012 நிகழ்வில் மரபுக்கவிதை பயிற்சியில் வெறும் கவிதையின் இலக்கண வடிவத்தை மட்டுமே விளக்கிக்கொண்டிருந்தபோது
கவிதை எழுத பணித்த ஆசிரியருக்கு கருத்தியலின் அடிப்படையை உணர்த்த முயல்வதாக இக் கழிநெடிலடி இலக்கணக் கவிதையை அமைத்தேன்.)
No comments:
Post a Comment