ஆகஸ்டு 15
புதியவன்
கழுதைக்கு தாலி கட்டுவதும்
ஆகஸ்டு 15ல் கொடியேற்றுவதும்
இரண்டும்
ஒன்றுதான்
அது போலித்
திருமணம்!
இது போலிச்
சுதந்திரம்!
வெள்ளைக் கயிறேறும் தேசக் கொடியும்
சலனமற்ற
மனிதர்களும்
ஜனகனமண
முணுமுணுப்பும்
சலசலக்கும்
கூட்டமும்
நெஞ்சுக்குள் குறுகுறுக்கும்…
வீரன் பகத்சிங்கை நினைத்ததும்
மின்னல் போல எண்ணுகிறேன்…
சுதந்திரமகள் தூக்கிலேற்றிக் கொல்லப்படுகிறாள்!
சுதந்திரமகள் தூக்கிலேற்றிக் கொல்லப்படுகிறாள்!
No comments:
Post a Comment