சொரனைக்கெட்டநமக்காக
சொரனைக்கெட்டநமக்காக
புதியவன்
உன் கையை
அருவாளால் வெட்டுவேன்
இன்னொரு கையால்
ஆப்பிள் கொடு எனக்கு...
உன் காலை
துப்பாக்கியால் சுடுவேன்
இன்னொரு காலால்
ஆட்டமிடு எனக்கு...
உன் மூளைக்குள்
அமிலத்தை ஊற்றுவேன்
பதிலுக்கு உன் நாவால்
துதிபாடு எனக்கு...
உன் கண்களை
சிகரெட்டால் பொசுக்குவேன்
என் கால்களைப் பிடித்து
தாராளமாய் பயணம் செய்...
தவறியும்
கண்சிவக்காதே
முஷ்டியை முறுக்காதே
வன்முறை செய்வது
அநீதியடா...
அதிகம் படித்தவை
-
இயல் – 1 இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள் 1.1. முன்னுரை எது இலக்கியம் என்பதற்குப் பல்வேறு விளக்கங்களும் கலந்துரையாடல்கள...
-
இலக்கிய அறிவியல் (இலக்கியத்தின் சமூக விஞ்ஞான வரைவியல்) புதியவன் இலக்கியம் என்பது ஒரு மொழியின் வெளிப்பாடாகும். மொழி என்பது ஒரு ச...
-
ஆய்வு நோக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதினங்களில் பழங்குடி மக்களின் தனித் தன்மையான வாழ்க்கை எத்தகைய முறையில் விவர...
-
புதின ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள் ச . பாலமுருகன் சோளகர் தொட்டி என்ற புதினத்தின் ஆசிரியர் ச . பாலமுருகன் ஆவார் . ...
No comments:
Post a Comment